செப்.7 மறியல் போராட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டம் நாகை தெற்கு ஒன்றியம் சார்பில் புதுச்சேரி கடைத்தெரு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து விளக்க உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முருகையன், ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல், மாவட்டக் குழு உறுப்பினர் கே.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.