districts

img

ஒன்றிய அரசை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, ஆக.28 - எல்லோருக்கும் கல்வி, வேலை, மருத்து வம் கிடைத்திடவும், சம உரிமை, ஜனநாயகம், சமத்துவம் நிலைத்திட வேண்டும். மதவெறி வகுப்புவாத சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும். இந்தியாவில் மதச்சார்பற்ற அடித் தளத்தை பாதுகாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாத, மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்தும், அகில இந்திய பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக திருச்சி திரு வெறும்பூர் ஒன்றிய தென்பகுதி கிளைகள் சார்பில் சனிக்கிழமை பூலாங்குடி காலனி பேருந்து நிறுத்தம் அருகில் தெருமுனை பிரச்சா ரம் நடைபெற்றது.  பிரச்சாரத்திற்கு சுபாஷ்சந்திரபோஸ் தலைமை வகித்தார். கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை பேசினார். தாலுகா செயலாளர் மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர் தெய்வநீதி, கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

;