tamilnadu

img

பெண்ணுரிமை காப்போம் தெருமுனைப் பிரச்சாரம்

தஞ்சாவூர் நவ.19- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக பி. சுகந்தி தலைமையில் வடலூரில் இருந்தும், வாலண்டினா தலை மையில் திருவண்ணாமலையில் இருந்து, நவம்பர் 25 முதல், டிசம்பர் 4 வரை 400 கி.மீ தூரம் நடைபெறக் கூடிய “வன்முறைகள் வேரறுப்போம், பெண்ணுரிமை காப்போம்” பெண்களின் நடைப்பயணத்தை விளக்கி, ஞாயிறு காலை, தஞ்சை மாநகரம் கீழ வாசலில், தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது. மாநகரச் செயலாளர் இ.வசந்தி தலை மையில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில், மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி , தஞ்சை ஒன்றியச் செய லாளர் டி.வசந்தி உள்ளிட்டோர் பேசினர். இதில் ஏராளமான மாதர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;