tamilnadu

img

ஜன.8 வேலை நிறுத்த தெருமுனைப் பிரச்சாரம்

 திருச்சிராப்பள்ளி, டிச.24- மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம் வருகிற ஜனவரி 8-ந்தேதி நடைபெறுகிறது. வேலை நிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் திருச்சி மரக்கடை பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். பிரச்சாரத்தை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தொமுச பேரவை செயலாளர் எத்திராஜ், மாவட்ட துணை செயலாளர் ராமலிங்கம்,  ஐஎன்டியுசி நிர்வாக தலைவர் தென்பாண்டியன், எச்எம்எஸ் சங்க நிர்வாகிகள் ஜான்சன், ராஜமாணிக்கம், ஏஐடியுசி நடராஜன் ஆகியோர் பேசினர். சிஐடியு மாவட்டப் பொருளாளர் ராஜேந்திரன், சுமைப்பணி மாவட்டக்குழு உறுப்பினர் முருகன், தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் குணசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;