அரியலூர், ஆக.8-
ஜெயங்கொண்டம் பகுதியில் தெரு நாய்களின் அட்ட காசத்தால் குழந்தைகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள் ளாகி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பு குமரன் நகர், எம்ஜிஆர் நகர் உள் ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்திக் கடிக்கின்றன. இதனால் குழந்தைகள், வாகன ஓட்டி கள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
தெரு நாய்கள் துரத்தியதால், வாகன ஓட்டிகள் சிலர் கீழே விழுந்து காயமடைந்து மருத்துவமனை சென்று திரும்பிய சம்பவமும் நடந்துள்ளது. இவ்வழியாக தனியே ஒருவரும் செல்ல முடியாத சூழல் இருப்பதால், ஒன்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து கையில் தடியுடன் சென்று வருகின்றனர்.
இதேபோல் நகரின் பல்வேறு இடங்களிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அவற்றில் சில நாய்கள், உடலில் ஆறாத காயங்களுடன் மிக மோசமான நிலையில், நோய்த் தொற்றை ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிகின்றன. எனவே தெரு நாய்களை அப்பு றப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.