திருநெல்வேலி, ஆக. 6-
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சனிக்கிழமை இரவு அரசுப் பேருந்து ஒன்று சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப் பட்டது. கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தை கடந்து தேவர் சிலை அருகே பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக ஓட்டுநர் சிவராஜ் பேருந்தை நிறுத்தினார். அப்போது ஆற்றுப் பாலம் அருகே இருட்டான பகுதியில் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் சிலர் கல் வீசி பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத் து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து சிவராஜ், சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.