districts

அரசு மருத்துவமனைகளில் இரவு நேர மருத்துவர் நியமிக்க சிபிஎம் வலியுறுத்தல்

நாகர்கோவில், அக்.21- அரசு மருத்துவமனையில் 24 மணி  நேரமும் மருத்துவர்கள் வருகையை  உறுதிப்படுத்தி, மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்துகள் அனைத்தும் இருப்பு வைப்பதோடு அதிகரித்து வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு பரிசோதனை வசதி ஏற்படுத்த நடவ டிக்கை எடுக்க தமிழக அரசையும், சுகா தார துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிள்ளியூர் கிழக்கு வட்டார வலியுறுத்தியுள்ளது. கருங்கல் அருகே சுண்டவிளை பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பள்ளம், மத்தி கோடு, வெள்ளியாவிளை, ஆலஞ்சி,  மிடாலக்காடு, கருக்கப்பனை, கருமா விளை, செல்லங்கோணம் உள்ளிட்ட கரையோரப்பகுதி மக்கள் மற்றும் மிடா லம், மேல்மிடாலம், ஹெலன்நகர், இனயம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடலோரப்பகுதி மக்கள் என நாள்தோ றும் 300 க்கும் மேற்பட்ட வெளிநோயாளி கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் காலை  7.30 மணி முதல் 12 மணிவரை  மருத்துவர்கள் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கின்றனர். பின்பு வரும்  நோயாளிக்குக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இருப்பதில்லை. மேலும் இரவு நேரங்களில் விபத்து  மற்றும் அவசர தேவைகளுக்கு அங்கு  கொண்டு சென்றால் மருத்துவர்கள் இல்லை என திருப்பி அனுப்புகின்றனர். அங்கிருந்து குளச்சல் அரசு மருத்துவ மனை அல்லது ஆசாரிப்பள்ளம் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். நீண்ட  தொலைவு காரணாக அப்பகுதிகளில் உள்ள மக்கள் தனியார் மருத்துவ மனைகளையே நாடி செல்கின்றனர். இதனால் ஏழை, எளிய மக்களின் பொரு ளாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி இரவு நேரங் களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க  கருங்கல் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவரை நியமனம் செய்ய  வேண்டும் என அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.