districts

திருச்சியில் சிவாஜி சிலையை திறக்க கோரிக்கை

தஞ்சாவூர், ஜூலை 23 -

    தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானாவில், சோழ மண்டல சிவாஜி பாசறையினர், நடிகர் திலகம் சிவாஜி யின் நினைவு நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருச்சியில்  நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிலை அமைக்க  முடிவு செய்யப்பட்டு, கடந்த திமுக ஆட்சியில், 2011 ஆம்  ஆண்டு, திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில், 9 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டது. தற்போது சிவாஜி சிலை 12 ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டு உள்ளது. அதை தமிழக அரசு திறந்து வைக்க வேண்டும் என சோழ மண்டல சிவாஜி பாசறையின் தலைவர்  வெங்கட்ராமன் கோரிக்கை வைத்துள்ளார்.