திருவில்லிபுத்தூர், அக்.8- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்த மான திருமுக்குளத்தில் மீன் பிடிப்பதற்காக வலை விரித்த போது அதில் அரை அடி ஐம்பொன் நடராஜர் சிலை சிக்கி உள்ளது. வருவாய்த்துறை ஆய்வாளர் மலர்பாண்டி யனிடம் சிலை ஒப்படைக்கப்பட்டு, சிலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.