தஞ்சாவூர், ஜூன் 30-
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக் கான தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கபடி, சிலம்பம், இறகுபந்து, கால்பந்து, வளை கோல்பந்து, கையுந்துபந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் இருபாலருக்கும், கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 25 வரை, தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவி யர்கள், பொதுப்பிரிவினர், மாற்றுத்திற னாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் பரிசளிப்பு விழா ஜூன் 19 அன்று நடைபெற்றது.
இதில், இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி சிறப்பித் தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளு மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள் மற்றும் வீரர், வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக மாநில அளவி லான விளையாட்டுப் போட்டிகள் சென்னை யில் ஜூன் 30 அன்று தொடங்கி ஜூலை 25 வரை நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் தஞ்சா வூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவி யர்கள், வீரர், வீராங்கனைகள் என மொத்தம் 694 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
முதலாவதாக, ஜூன் 30 முதல் ஜூலை 4 வரை பள்ளி மாணவ, மாணவியர்களுக் கான கபடி, வாலிபால் மற்றும் பள்ளி, கல்லூரி யைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக் கான சிலம்பம் விளையாட்டுப் போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து மொத்தம் 65 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் அன்னை சத்யா விளை யாட்டரங்கிலிருந்து அரசு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு சென்னை சென்றனர். தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் பேருந்தினை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், பங்கேற்பாளர்களை போட்டிக்கு அழைத்துச் செல்லும் உடற்கல்வி ஆசிரி யர்கள், ஆசிரியைகள் மற்றும் மாவட்ட பயிற்றுநர்கள் உடனிருந்தனர்.