அறந்தாங்கி, ஆக.2-
மாநில அளவிலான 39 ஆவது கராத்தே போட்டிகள் (சப்-ஜூனியர் பிரிவு) சென்னை மான்போர்ட் பள்ளியில் நடைபெற்றன.
இதில், புதுக்கோட்டை டிஸ்ட்ரிக்ட் ஸ்போர்ட்ஸ் அண்ட் ட்ரெடிஷனல் கராத்தே டூ அசோசியேஷன் சார்பில் ஹர்ஷவர்தன் (7 வயது பிரிவு), இவான்ஜலின் (10 வயதுக்குட்பட்ட பிரிவு), அபினேஷ் (13 வயதுக்கு உட்பட்ட பிரிவு), பிரபாகரன் (12 வய துக்கு உட்பட்ட பிரிவு) ஆகியோர் பங் கேற்றனர்.
இதில் பிரபாகரன், அபி னேஷ், ஹர்ஷவர்தன் ஆகியோர் குமிட்டே போட்டியில் வெள்ளிப் பதக்க மும், இவான்ஜலின் பெண்கள் பிரிவு குமிட்டே போட்டியிலும் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களது பயிற்சியாளர் மற்றும் பெற்றோருக்கு மாவட்ட கராத்தே அமைப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.