districts

img

அரங்கக்குடியில் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்தாட்டப் போட்டி

மயிலாடுதுறை, பிப்.18 -  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் வடகரை அரங்கக்குடியில் ஆர்.ஜே.எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான 23 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது.  முதல் நாள் போட்டியை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா  துவக்கி வைத்தார். பிப்.16, 17 ஆகிய இரு  நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் மயிலாடு துறை, கடலூர், பாண்டிச்சேரி, இராமநாத புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணி கள் பங்கேற்றன.  நிறைவு நாளான சனிக்கிழமையன்று, 2  ஆம் நாள் போட்டியை பூம்புகார் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிவேதா முருகன் துவக்கி வைத்தார். முதல் பரிசு ரூ.20 ஆயிரம்,  2 ஆவது பரிசு ரூ.15,000, 3 ஆவது பரிசு ரூ.12 ஆயிரம் என  ஆறு பிரிவுகளாக ரூ.6000 வரை பரிகள் வழங்கப்பட்டன.  இறுதிப் போட்டியில், திருச்சி மாவட்டம் ஆர்மெட்  போலீஸ் அணியும், இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அணியும் மோதின.  இதில் திருச்சி மாவட்டம் ஆர்மெட் போ லீஸ் அணியினர் வெற்றி பெற்று கோப்பை யுடன் முதல் பரிசு 20,000 ரூபாயை தட்டிச் சென்றனர்.  இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அணியினர் 2 ஆவது பரிசு ரூ.15,000 பெற்றனர். 3 ஆவது பரிசை பாண்டிச்சேரி பூமை யார்பாளையம் அணியும், 4, 5 மற்றும் ஆறா வது பரிசுகளை மயிலாடுதுறை மாவட்டத்தைச்  சேர்ந்த செவன் ஸ்டார் அணி, நல்லாடை அணி, ஆர்ஜேஎஸ் அரங்கக்குடி வடகரை அணிகள் பெற்றன. மின்னொளியில் நடை பெற்ற இந்த போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.