தஞ்சாவூர், செப்.11- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட, களத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில், 5 வகுப்பறை கள் கொண்ட கட்டடம் கட்டுவதற்கு, பேரா வூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக் குமார் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொ டர்ந்து பள்ளி வளாகத்தில், மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மேலும், அதே பள்ளியில் படிக்கும் 7 ஆம் வகுப்பு மாணவி நீலஸ்ரீ மாவட்ட அளவி லான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்று, மாநிலப் போட்டிக்கு தேர்வாகி யுள்ளார். அவரை பாராட்டி சால்வை அணி வித்து வாழ்த்து தெரிவித்தார். இலவச திருமணம் ஆத்தாளூர் வீரகாளியம்மன் திருக்கோ விலில், தமிழ்நாடு அரசு இந்துசமய அற நிலையத்துறை மற்றும் திருக்கோயில் நிர்வா கத்தின் சார்பில் நடராஜன் - சத்யா ஆகியோ ருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை மற்றும் வெள்ளாட்டுக் குட்டி பரிசுடன் திரு மணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலை யத்துறை ஆய்வாளர் அமுதா, செயல் அலு வலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை யில் நா.அசோக்குமார் எம்எல்ஏ திரு மணத்தை நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேராவூரணி ஒன்றி யம் மாவடுகுறிச்சி ஊராட்சி, ஆத்தாளூர் வடக்கு - நாடாகாடு முனிக்கோயில் சாலை அமைக்கும் பணியையும், நாடியம் - உடைய நாடு சாலையில் காட்டுத்தளம் வடிகால் வாய்க்கால் குறுக்கே உயர் மட்டப் பாலம் அமைக்கும் பணியையும், முதுகாடு பூலாங் கொல்லை வழி பெருமகளூர் சாலை அமைக் கும் பணியையும் சட்டப்பேரவை உறுப்பி னர் நா.அசோக்குமார் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் அமிர்தம் பழனிவேல், பிரேம் செல்வன் உள்ளிட்ட ஊராட்சித் தலை வர்கள் கலந்து கொண்டனர்.