districts

img

ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

புதுக்கோட்டை, மே 10 - திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்  வழக்கம் போல 100 சதவீதம் தேர்ச்சி பெற்று  சாதனை படைத்துள்ளனர். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்க டேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கம்போல் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 37, மாணவிகள் 37 என தேர்வு எழுதிய 74 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். யாழினி, சுஜிதா, துர்கா, மணிவாசன் ஆகி யோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர். கணித பாடத்தில்  யாழினி, சுஜிதா, தீபஸ்ரீ, மணிவாசன், மேகஸ்வனா, ஆதிஷ், கவின் கிஷோர், லோ கேஸ்வரன், முகமது அர்சத் ஆகியோர் 100-க்கு  100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் யாழினி, சுஜிதா, தீபஸ்ரீ, ஆலியா ஜாஸ்மின், சமூக அறிவியல் பாடத்தில் துர்கா, மகாநிவேதிதா, சந்தோஷினி, ஆங்கில பாடத்தில் யாழினி ஆகியோர் 100-க்கு  100 மதிப்பெண் பெற்றுள்ளார். 475 மதிப்பெண் ணுக்கு மேல் 23 பேரும், 450 மதிப்பெண்ணுக்கு  மேல் 35 பேரும், 400 மதிப்பெண்ணுக்கு மேல்  56 மாணவர்களும் பெற்றுள்ளனர்.  வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி, பள்ளியின் ஆலோ சகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, நிர்வாக இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, ஆலோசகர் நாகா அதியன், இயக்குநர் சுதர்சன், சிஇஓ காவியா மூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.

;