மன்னார்குடி, ஜன.27 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அசோக் சிசு விகார் மெட்ரிகுலேசன் பள்ளியின் 39 ஆவது விளையாட்டு தினம் நடைபெற்றது. பின்லே விளையாட்டு திடலில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளித் தாளாளர் கல்வியாளர் எம்.ஜி.வெங்கட்ராஜன் தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்.ஏ.அமிர்தராஜ், ஆர்.ஏ. ஆனந்தராஜ் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சுந்தரி வரவேற்றார். முதன்மை விருந்தினர் காவல் துணை கண்காணிப்பாளர் ஏ. அஷ்வத்ஆர்டோ ஆரோக்கியராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். திருவாரூர் ஹாக்கி ஃபெடரேசன் தலைவர் ஏ.எஸ்.வி அசோகன் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். சாரே ஜஹான் சே அச்சா மாணவர்களால் தேச ஒற்றுமை பாடல் பாடப்பட்டது. முதன்மை விருந்தினர், பள்ளி குழுக்களை பார்வையிட்டு விளையாட்டு திடலின் மையத்தில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். நல்லிணக்க சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன. மாணவர்களின் விளையாட்டுகள் நடைபெற்றன. ஆசிரியர் ஜி.நித்தியபிரபா நன்றி கூறினார்.