மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் பள்ளியில் நடந்தது. முகாமை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள், காது கேட்கும் கருவிகள் மற்றும் தொழில்கடன் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.