districts

img

புதுகை அரசு மகளிர் கல்லூரியில் சிறப்பு கல்விக் கடன் முகாம்

புதுகை அரசு மகளிர் கல்லூரியில்  சிறப்பு கல்விக் கடன் முகாம் புதுக்கோட்டை, பிப்.15 - புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்  கல்லூரியில், மாவட்ட  நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் ‘சிறப்பு கல்விக் கடன் முகா மினை” மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வியாழனன்று தொடங்கி வைத்தார். கல்விக் கடன் உதவித்தொகைக்கான ஆணைகள் மற்றும்  காசோலைகளை வழங்கி ஆட்சியர் பேசுகையில், “புதுக் கோட்டை மாவட்டத்தில் இதுவரை சுமார் 700-க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகளுக்கு ரூ.18.69 கோடி மதிப்பீட்டில்  வங்கிகளின் மூலம் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.  இம்முகாமில் விண்ணப்பித்த 128 மாணவ, மாணவிகளுக்கு  ரூ.6.98 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வங்கி கிளைகளின் மூலம் கல்விக்கடன் வழங்கப்பட உள்ளது” என்றார். மாநிலங்களவை  உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.