மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் விளக்கவுரையாற்றினார். மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், ஒன்றிய-நகரக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.