districts

செப். 23, 24 தஞ்சையில் தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடு

தஞ்சாவூர், செப்.17-  உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடு செப்டம்பர் 23, 24 தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூரில் உலகத்  தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் சனிக்கிழமை  செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல், அரிக்க மேடு, பூம்புகார், முசிறி (கேரளம்), கீழடி போன்ற பல இடங்களில் மேற் கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மூலம் உலகின் மிகத் தொன்மையான நாக ரிகம் தமிழர் நாகரிகமே என்பது நிலை  நிறுத்தப்பட்டுவிட்டது. நமது தொன்மை யின் சிறப்பையும், பெருமையையும் உலகமே வியந்து பாராட்டுகிறது. எனவே, அனைத்துத் தமிழர்களும் நமது வரலாற்றுத் தொன்மையை அறிந்து  கொண்டு பெருமிதப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் உலகத் தமிழர் பேரமைப்பின் 10 ஆம் ஆண்டு மாநாடு தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடாக தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங் கத்தில் செப்.23, 24 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில், சிந்துவெளி நாகரிகம், தமிழ் நாட்டில் தொல்லாய்வு நடைபெற்ற இடங்கள் ஆகியவற்றில் கண்டறியப் பட்ட தொல் தமிழர் நாகரிகத் தடயங்க ளின் படங்கள், அவை பற்றிய குறிப்பு கள், பழம் நாணயங்கள், மறைந்து போன நெல் வகைகள் போன்றவை இடம்பெறும் வகையில் தமிழர் தொல்  வரலாற்றுக் கண்காட்சி அமைக்கப்பட வுள்ளது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த  மாநாட்டில் சிந்துவெளி நாகரிகத்தில் தொடங்கி, கீழடி நாகரிகம் வரையி லான தொல்லாய்வு தடங்கள் குறித்து  ஆய்வு செய்த அறிஞர்கள் உரையாற்ற வுள்ளனர். முதல் நாள் மாநாட்டுக்கு முனைவர் வீ.அரசு தலைமை வகிக்கிறார். முது முனைவர் ஆ.சிவசுப்பிரமணியன் தொடக்கவுரையாற்றுகிறார். இரண்டாம்  நாள் கருத்தரங்கத்துக்கு தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கோ.பாலசுப்ரமணியன் தலைமை வகிக்கிறார். வழக்குரைஞர்  த.பானுமதி தொடக்கவுரையாற்று கிறார்.  பல்வேறு கருத்தரங்கங்களில் பேரா சிரியர் த.செயராமன், முனைவர்கள் இரா.காமராசு, ஆ. பத்மாவதி, பெ.ரவிச் சந்திரன், வீ.செல்வகுமார், கோ.விசய வேணுகோபால், சு.இராசவேலு, க.த. காந்திராசன், தியாக சத்தியமூர்த்தி, நா.மார்க்சிய காந்தி, முனைவர் அமர்நாத் இராமகிருட்டிணா, கணியன் பாலன் ஆகியோர் பேசுகின்றனர்.  தமிழறிஞர்கள், தொல்லாய்வு அறி ஞர்களின் கட்டுரைகள் அடங்கிய மாநாட்டு மலர் வெளியிடப்படவுள்ளது. மிகச் சீரிய வகையில் தமிழுக்கு அய ராது தொண்டாற்றி வரும் 10 அறிஞர் களுக்கு உலகப் பெருந்தமிழர் விருது  வழங்கப்படுகிறது. முதல் நாள் விரு தளிப்பு விழாவுக்கு கவிஞர் காசி ஆனந்தனும், இரண்டாம் நாள் விருத ளிப்பு விழாவுக்கு மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் தலைமை வகிக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன், சதா.முத்துக்கிருட்டிணன் உடனிருந்தனர்.