districts

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாம்

தஞ்சாவூர், டிச.22 -  பொதுமக்கள் இணையவழி வாயிலாக தற்போது பெற்று வரும் சேவைகளை விரை வாகவும், பல்வேறு துறைகள் மூலம் பெற்று வரும் வெவ்வேறு சேவைகளை ஒரே இடத்தி லும் பெறுவதற்கு, “மக்களுடன் முதல்வர்”  என்ற பெயரில் புதிதாக திட்டம் துவக்கப் பட்டு சிறப்பு முகாம்கள் மாவட்டம் முழு வதும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு முகாம்களுக்காக, தஞ்சா வூர் மாவட்டத்தில், டிச.23 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3  மணி வரை, தஞ்சாவூர் மாநகராட்சியில் என். கே.ரோடு, காவேரி ஹால், கும்பகோணம் மாநகராட்சியில் பேச்சியப்பன் தெரு, பாலாஜி  மஹால், சோழபுரம் பேரூராட்சி ஜி.எஸ்.டி  திருமண மண்டபம், மெலட்டூர் அரசு மேல்நி லைப் பள்ளி, திருப்பனந்தாள் வேலவன் திருமண மண்டபம், திருவிடைமருதூர் திரு வாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப் பள்ளி யில், மாநகராட்சியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதியான கடகடப்பை சமுதாயக் கூடம், பாபுராஜபுரம் ஊராட்சி நூலகத்தில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை கணினி மூலம் பதிவு செய்து, தேவையான ஆவணங்களைப் பெறுவதற்கு, அதற்குரிய கட்டணம் செலுத்தி தொடர்புடைய துறை களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.  பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும்  சேவைகளை பெறுவதற்கு, அதற்குரிய ஆவ ணங்களை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்  தெரிவித்துள்ளார்.