திருச்சிராப்பள்ளி, ஜூலை 29 -
திருச்சி தேசியக் கல்லூரி மற்றும் எக்செல் குழுமம் இணைந்து தென்னிந்திய அளவிலான எக்செல் கோப்பை ஐவர் கால்பந்துப் போட்டியை சனிக்கிழமை தேசிய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடத்தியது.
துவக்க விழாவிற்கு கல்லூரிச் செயலர் ரகுநாதன் தலைமை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி வரவேற்றார். எக்செல் குழும நிறுவனங்க ளின் தலைவரும், ரோட்டரி முன்னாள் ஆளுநரு மான முருகானந்தம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். இதில் 13 வயதிற்கு உட்பட்டவர்களுக் கும், 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்குமான தனித்தனிப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் 64 அணி கள் பங்கேற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற அணி களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.