திருச்சிராப்பள்ளி, செப்.13- திருச்சிராப்பள்ளியில் கடந்தவாரம் பெய்த மழையால் சில முக்கிய சாலைகள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில சாலை களில் மழைநீர் வடிகால் கட்டப்பட்ட போதி லும், தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்தவாரம் மாவட்டத்தில் மிதமான மழைதான் பெய்தது. இருப்பினும் மேஜர் சரவணன் சாலை, தில்லை நகர் பகுதிகள், அலெக்சாண்டிரியா சாலை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி யது. வடகிழக்குப் பருவமழையின் போது இப்பகுதியில் மீண்டும் பிரச்சனை ஏற்படா மல் இருக்க, மாநகராட்சி போதிய முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் என நம்பு வதாகக் கூறினார் கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த சி.பாலசுப்ரமணியன். ரயில் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள (சென்னை மார்க்கத்தில் உள்ள அணுகு சாலை) சாலையில் செல்லும் வாகன ஓட்டி கள், ஒரு நாள் மழைக்குப் பிறகும், தேங்கி நின்ற மழைநீரில் தான் பயணிக்க வேண்டி யிருந்தது. தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளா கத்தின் முன்புறமுள்ள அணுகு சாலையில் மழைநீர் வடிகால் கட்டியிருந்தாலும், மழை நீர் அதன் வழியாகச் செல்லவில்லை. காவல்துறை பட்டாலியன் மைதா னத்திற்கு முன்னால் உள்ள அணுகு சாலை யில் சாலையின் இடதுபுறத்தில் மழைநீர் வடிகால் இருப்பதால் தண்ணீர் தேங்க வில்லை. ஆனால், தண்ணீர் வடியவில்லை. லேசான மழைக்குகே இந்த நிலை என்றால், வடகிழக்குப் பருவமழையின் போது என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். தண்ணீர் தேங்குவதால் ஏதேனும் அசம்பா விதம் நிகழும் முன் அதை சரிசெய்ய வேண் டும் என்கின்றனர் மக்கள்.