திருச்சிராப்பள்ளி, மார்ச் 13 - மாநில அளவிலான சப் ஜூனியர், ஜூனியர் சாப்ட் பால் விளையாட்டுப் போட்டிகள் மார்ச் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் திருச்சியில் உள்ள எஸ்பிஐஒ பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் விளையாட திருச்சியில் உள்ள சாப்ட் பால் வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது. தேர்வில் பெண்கள் பிரிவில் 56 வீராங்கனைகளும், ஆண்கள் பிரிவில் 86 வீரர்களும் கலந்து கொண்டனர். சப் ஜூனியர் பிரிவில் 16 வீரர், 16 வீராங்கனைகள், ஜூனியர் பிரிவில் 16 வீரர்கள், 16 வீராங்கனைகள் என மொத்தம் 64 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திருச்சி மாவட்ட சங்க தலைவர் டி.ஜே.வெங்கடேஷ் துரை, எஸ்பிஐஓ பள்ளி தாளாளர் கணபதி, சுப்பிரமணியன், ஷாப்ட் பால் சங்க செயலாளர் சரவணன், இணை செயலாளர் சூர்யா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.