districts

img

பாதுகாப்பு என்பது விரைவாக பணி செய்வதற்கே! - மின்வாரிய பொறியாளர் சங்கம் விழிப்புணர்வு

திருவாரூர், செப்.3 - தமிழ்நாடு மின் வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் மின் விபத்தினை குறைக்க மின்சார வாரியம் பல்வேறு நடவடிக்கை களை, பயிற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் மின் விபத்துகள் தொடர் கின்றன. இந்நிலையில் மின் விபத்துகளை குறைக்க தமிழ்நாடு மின் வாரிய பொறியா ளர் சங்கம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகின்றன. அதனொரு பகுதி யாக தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலு வலகங்களில் மின் விபத்து விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் வைத்து மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் திருவாரூர் கிளைச் செயலாள ரும், மாநில அமைப்பு செயலாளருமான முனைவர் சா.சம்பத் கூறியதாவது: மின்சார வாரியம் மின் விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் மின் விபத்து தொடர்வதும், அதனால் மின் வாரிய ஊழி யர்கள் குடும்பங்கள் துயரத்தில் இருப்பதும்  மிகுந்த வேதனை அளிக்கிறது. அந்த துய ரினை தடுக்க மின் வாரிய பணியாளர்களி டம் மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை  ஏற்படுத்த பொறியாளர் சங்கம் பயிற்சி,  கட்டுரைகள் என பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக பாதுகாப்பு விழிப்பு ணர்வை பணியாளர்களிடம் ஏற்படுத்த தமிழ் நாடு மின் வாரிய பொறியாளர் சங்கம் சார்பில்,  தமிழகம் முழுவதும் மின் வாரிய அலுவல கங்கள் முன்பு மின் விபத்தை தடுக்க விழிப் புணர்வு தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில்  திருவாரூர், மன்னார்குடி மற்றும் திருமக் கோட்டை எரிவாயு சுழலி மின் திட்ட மின்வா ரிய அலுவலகம் முன்பு பேனர்கள் வைக்கப் பட்டுள்ளன. மின்சாரம் ஆபத்தானது என்பதை அறிந்தே மின்வாரிய பணியில், பணியா ளர்கள் சேர்ந்துள்ளனர். அதில் மின் பாது காப்பு சாதனங்களை பயன்படுத்தி பாது காப்பாக மின்வாரிய ஊழியர்கள் பணி செய்ய வேண்டும். மேலும் அதிகாரிகள் அந்த  பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஆனாலும் 90 சதவீத மின் விபத்துகள், எர்த் ராடு போன்ற பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தாததால் நடைபெறுகிறது. மின் விபத்திற்கு பணிச்சுமை மற்றும் அவசரம் ஆகியன காரணங்களாக சொல்லப் படுகிறது, ஆனாலும் பாதுகாப்பாக பணி  செய்ய முடியாமல் போக இவை காரண மல்ல. ஏனெனில் இது அவர்களின் உயிர். விரைவாக பணி செய்ய வேண்டியது அவ சியம் என்றாலும், அதற்காக பாதுகாப்பினை  புறந்தள்ளிவிட்டு யாரும் பணி செய்ய சொல்லவில்லை. பாதுகாப்பு என்பது  விரைவாக பணி செய்வதற்கே என்பதை  பணியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மின் விபத்தை தடுக்க வேண்டும். மின்  விபத்தை தடுப்பதே பொறியாளர் சங்கத்தின்  குறிக்கோள். இவ்வாறு அவர் கூறினார்.