அரியலூர், ஜூன் 23 -
சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற் பனை துவக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறு தானிய ஆண்டாக அறிவித் துள்ளது.
அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் சட்ட மன்றத்தில், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைகள் மூலம் சிறுதானிய உணவுப் பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும் என அறிவித்தார்.
அந்த வகையில் புதனன்று அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கூட்டுறவு நியாயவிலைக் கடை எண்.1-இல் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனையினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
மேலும், அரியலூர் மாவட்டத்தில் முழுநேர மற்றும் பகுதி நேர நியாய விலைக்கடைகள் என மொத்தம் 465 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் நகர்ப்பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் பொதுமக்களின் வரவேற்பினைப் பொறுத்து அரிய லூர் மாவட்டத்தின் கிராமப்புறங்கள் என அனைத்து பகுதிகளிலும் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.