மயிலாடுதுறை டிச.28- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சர்வதேச சிறுதானிய ஆண்டு உணவு திருவிழா வியாழனன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணி மேகலை தொடங்கி வைத்து, சிறப்பாக சிறு தானிய கண்காட்சி அமைத் தவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் பானுகோபன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (வேளாண்மை) ஜெய பால் மற்றும் அரசு அலுவ லர்கள் கலந்து கொண்ட னர்.