districts

img

சிறுதானிய நன்மைகள்: விழிப்புணர்வு பேரணி

திருச்சிராப்பள்ளி, டிச.20 - திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சிய ரகத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் சிறுதானிய உணவு ஆண்டை முன் னிட்டு புதனன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சிறுதானியத்தை பயன்படுத்து வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில், கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்  பிரதீப் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி ஆட்சியரகத்தில் தொடங்கி, நீதிமன்றம் ரவுண்டானா வரை நடைபெற்றது.  பேரணியில், மாவட்ட நியமன அலு வலர் டாக்டர் ரமேஷ்பாபு, உணவு பாதுகாப்பு  அலுவலர்கள்  மற்றும் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.