திருச்சிராப்பள்ளி, ஜன.27- பாஜக-வைத் தோற்கடிக்கும் பாரம்பரியத்தை தமிழ்நாடும், கேரளமும் தொடரட்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அறைகூவல் விடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், திருச்சி மாவட்டம் சிறுகனூரில், ‘வெல்லும் ஜனநாய கம்’ என்ற தலைப்பில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டா லின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சிபிஐ தேசிய பொதுச்செய லாளர் து.ராஜா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. உள் ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி தலை வர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு: இன்றைய முக்கியப் பிரச்சனை என்ன என்பதை பல தலைவர்கள் இங்கு எடுத்துரைத்துள்ளனர்.
இன்று நாம் முன்வைக்க வேண் டிய ஒரே முழக்கம் “இந்தியாவை காப்பாற்ற வேண்டும்” என்பது தான்! நாளை செழுமையான இந்தி யாவை உருவாக்க இன்றைய இந்தியா காப்பாற்றப்பட வேண்டும். இன்றைய இந்தியாவை காப்பதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
அண்டை மாநிலமான கேரளமும் தமிழ்நாடும் இணைந்து இந்தியா வை காக்கும் போராட்டத்தில் முன்ன ணியில் உள்ளன. கேரளத்தில் எங்களது கட்சி யான சிபிஐ(எம்) தலைமையில் இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. இரண்டு மாநி லங்களிலும் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றிபெற முடியவில்லை. கேர ளத்தில் சட்டமன்றத்தில் கூட அவர்கள் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. இந்த இரண்டு மாநிலங்களில்தான் பாஜக-வுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட கிடையாது.
இந்த நிலையை நீங்கள் வேறு எந்த மாநிலத்திலும் பார்க்க இயலாது. தமிழ்நாட்டு மக்களும் கேரள மக்களும் ஒரு இடம் கூட பாஜக-வுக்கு தரக்கூடாது என்ப தில் உறுதியாக உள்ளனர். எனவே தான், இரு மாநில மக்களும் இந்தி யாவுக்கே வழிகாட்டியாக உள்ள னர். 2019 தேர்தல்களை போலவே 2024 தேர்தல்களிலும் திரு. ஸ்டா லின் தலைமை தாங்கும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி ஒரு இடத்தில் கூட பாஜக வை வெற்றிபெற விடாது என்பதை உத்தரவாதம் செய்யும் என நம்பு கிறேன். தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாஜக உறுப்பினரை கூட இங்கி ருந்து தில்லிக்கு அனுப்பாத அந்த பாரம்பரியத்தை தொடர்வார்கள் என்பது நிச்சயம். அது மிக மிக முக்கியம்.
பொருளாதார சுயசார்பும் ஒடுக்கப்பட்ட மக்களும்
இன்று நாம் என்ன பார்த்து கொண்டுள்ளோம்? நமது அரசியல் சட்டத்தின் அடிப்படை தூண்கள் எனப்படும் மகத்தான விழுமியங் கள் அழிக்கப்பட்டு கொண்டுள்ளன. இந்த அடிப்படை தூண்களில் முதன்மையானது நமது தேசத்தின் பொருளாதார சுயச்சார்பு. பொருளா தார சுயச்சார்பு அழிக்கப்பட்டால் இந்தியாவின் சாதாரண மக்கள் அனைவரும் பாதிக்கப்படுவர். முக்கியமாக எனது தலித், பழங்குடி இன சகோதர மக்கள் மிக மோச மாக பாதிக்கப்படுவர். அவர் களுக்கு கிடைத்தவை மிக சொற்ப மான நன்மைகள். மிக சொற்பமான வைதான்! அந்த சொற்பமான நன்மைகள் கூட, இட ஒதுக்கீடுகள் கூட தனியார்மயம் தொடர்ந்தால் முற்றிலுமாக அழிந்துவிடும்.
தனியார்மயம் என்பது பா.ஜ.க. அரசின் மோசமான பொருளாதார சுயச்சார்பை அழிக்கும் செயல். இதனை தடுக்க, தலித் மக்கள் மற் றும் பழங்குடி இன மக்கள் மீதும் ஒடுக்கப்பட்டவர்கள் மீதும் ஏவப் படும் தாக்குதல்களை தடுக்க, சாதிய அடக்குமுறைகளை ஒழிக்க, தலித் மக்களின் உரிமைகள் பாது காக்கப்பட இந்த இந்துத்துவா சக்தி கள், பாசிச சக்திகள், அரசு அதிகா ரத்தை ஆக்கிரமிப்பதை தடுப்பது மிக அவசியம்.
பாஜக ஆட்சியை அகற்றுவதே நம் அனைவரின் முதல் பணி
இந்துத்துவா சக்திகள் இந்திய குடியரசின் ஜனநாயக மதச்சார் பின்மை தன்மைகளை மாற்ற முயல்கின்றன. அவர்கள் ஜன நாயக மதச்சார்பற்ற குடியரசு என்பதற்குப் பதிலாக மனுஸ்மிருதி அடிப்படையில் செயல்படும் ஒரு இந்துராஷ்ட்ரா அமைப்பை உருவாக்க கடுமையாக முயல்கின்றனர். எனவேதான், சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்வதை பார்க்க முடிகிறது. மனுஸ் மிருதி அடிப்படையில் ஆட்சி அமைந்தால் இந்த ஒடுக்கு முறைகள் இன்னும் தீவிரமாகும். அவர்கள் சாதிய அடிப்படை யிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை விரும்பவில்லை. ஏனெனில் சமூகத்தில் எத்தகைய சாதிய ஒடுக்குமுறைகள் உள்ளன என்பதும், எத்தகைய சாதியப் பிளவுகள் இருக் கின்றன என்பதும் வெளிச்சத்திற்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை. சாதிய ஒடுக்குமுறையை ஒழிக்க வேண்டும் என்ற திசைவழியில் பயணிக்க வேண்டும் எனில், நாம் செய்ய வேண்டிய முதல் பணி பாஜக-வை ஆட்சியிலிருந்து அகற்றுவதுதான்!
அரசியலமைப்புச் சட்டத்தை மீறி நடந்த அயோத்தி விழா
அரசியல் சட்டத்தை மீறி உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு தலையும் மீறி அயோத்தியாவில் கோவில் தொடக்கவிழா எப்படி நடந்தது என்பதை நாம் கண்டோம். அது ஒரு அரசு விழாவாக நடந்தது. பிரதமரும் உ.பி. முதல்வரும் கலந்து கொண்டனர். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமா னது. பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரண்பட்டது. அரசு எந்த ஒரு மதத்துக்கும் சார்பாக இருக்கக் கூடாது. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட வரை வுக் குழு கொடுத்த நமது அரசியலமைப்பு சட்டம், ஜனநாயக மதச்சார்பற்ற தன்மைகளை அடிப்படைத் தூண்களாக கொண்டது. அரசியலமைப்பு சட்டம் மூலமாகவே இந்தியா எனும் சுயச்சார்பு கொண்ட தேசம் உருவாக்கப்பட்டது.
சர்வாதிகாரத்தை நோக்கி அதிகாரக் குவிப்பு
நமது அரசியல் சட்டத்தின் முதல் பிரிவு என்ன சொல்கி றது? இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். ஆனால் இன்று மாநிலங்களின் சுயாட்சி உரிமைகள் அனைத்தும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. பல்வேறு வழிகளில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அரசிய லமைப்பு சட்டம் மாநிலங்களுக்கு தந்த உரிமைகள் சிதைக்கப் படுகின்றன. கூட்டாட்சி தத்துவத்துக்கு மிகப்பெரிய ஆபத்து தோன்றியுள்ளது. ஜனநாயக மதச்சார்பற்ற தேசத்தை ஒரு இந்து ராஷ்ட்ரா பாசிச அரசாக மாற்றுவதற்கு ஒருமுகத் தன்மையுள்ள அனைத்து அதிகாரங்களும் தம்மிடம் குவித்து வைத்து கொண்டுள்ள ஒரு அரசு முறை அவர்களுக்கு தேவைப் படுகிறது. கூட்டாட்சி அரசு அவர்களுக்கு ஒரு தடையாக உள்ளது.
தடையாக உள்ள கூட்டாட்சி அரசு அவர்களுக்கு தேவை இல்லை. ஒருமுகத்தன்மை கொண்ட சர்வாதிகார அரசை நோக்கி இந்த தேசத்தை இந்துத்துவா சக்திகள் நகர்த்திக் கொண்டுள்ளன. அதற்கு எதிராக போராட வேண்டும். அந்த சதியை தோற்கடிக்க வேண்டும். அதே போல சமூக நீதி எனும் இலக்கும் மேலும் மேலும் பின்னுக்கு தள்ளப்படுகிறது. சமூகநீதிதான் சாதிய அடக்கு முறையை தடுக்கும். அத்தகைய சமூகநீதி உறுதிப்பட வேண்டும் எனில் சாதிய ஒடுக்குமுறை தடுக்கப்பட வேண்டும் எனில் பா.ஜ.க.வின் அரசாங்கம் தொடரக்கூடாது.
தேர்தல் ஆணையம் பாஜக அரசின் கட்டுப்பாட்டில்!
எனவே நம்முன் ஒரு மிகப்பெரிய அரசியல் போராட்டம் காத்திருக்கிறது. இந்த அரசியல் போராட்டத்தில் இந்துத் துவா சக்திகளையும் பாஜக-வையும் தோற்கடிக்க வேண்டும். இந்த சக்திகள் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கிய ஜன நாயக மதச்சார்பின்மை அரசின் அனைத்து அமைப்புகளை யும் சீர்குலைத்துவிட்டன. சமீபத்தில் நீங்கள் பார்த்தீர்கள். தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் எப்படி நியமிக்கப்படு வார்கள் என்பதை! உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யும் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் அடங்கிய குழு தேர்தல் ஆணைய அதிகாரிகள் குறித்து முடிவு செய்ய வேண்டும் எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி பிரத மர்/ பிரதமர் நியமிக்கும் அமைச்சர்/ எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய குழு என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக் கும். ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் நடைமுறைகளும் உரி மைகளும் சிதைக்கப்படுகின்றன. நீதித்துறையின் மீது தமது கருத்துகளை பல்வேறு வகைகளில் இந்த அரசு திணிப்பதற்கு செய்யும் முயற்சிகளும் வெளிப்படுகின்றன. அமலாக்கத் துறை யும் புலனாய்வு அமைப்புகளும் இந்த அரசின் கைகளில் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் ஆயுதங்களாக மாறியுள்ளன.
செழுமையான இந்தியாவை உருவாக்க...
இந்த வகையில்தான் இந்திய குடியரசின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தன்மைகளும் மாற்றப்படு கின்றன. சாதிய அடக்குமுறைகளை தடுக்கவும் சாதிவாரி யான கணக்கெடுப்பு தேவை என்றால் அது நடக்க வேண்டும் என்றால் பாஜக அரசாங்கம் அகற்றப்பட வேண்டும். இந்த மிகப்பெரிய அரசியல் போராட்டத்துக்காகவே இந்தியா கூட்டணி என்பது உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை போலவே அனைத்து மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி, பாஜக-வை தோற்கடிக்க நாம் முழு ஒத்துழைப்பு தருகி றோம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த மாபெரும் அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஒரு பாஜக உறுப்பினரையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பாது எனும் பாரம்பரியத்தை தமிழ்நாடு தொடர வேண் டும். நாளை இன்னும் செழுமையான இந்தியாவை உருவாக்க இன்றைய இந்தியாவை பாதுகாக்க வேண்டும். அந்த போராட் டத்தில் விசிக-வும் தோழர் திருமாவளவன் அவர்களும் முழு வெற்றிபெற நான் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி தனது உரையில் குறிப்பிட்டார்.