திருச்சிராப்பள்ளி, டிச.31 - திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க தமிழக அரசு நிலம் கையகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருச்சி பால்பண்ணை-துவாக் குடி சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
14.4 கி.மீ., நீளமுள்ள நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதி களில், சர்வீஸ் சாலை வசதி இல்லாத பகுதிகளில் வசிக்கும் அம்மக்கள், ஒரு லட்சம் கையெழுத்து பெற்று, தங்களின் கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்க திட்டமிட்டுள்ளனர். கடந்த 30 மாதங்களுக்கும் மேலாக சர்வீஸ் ரோடுகளை மேம்படுத்த பால்பண்ணை - துவாக்குடி இடையே 57 ஆயிரம் சதுர மீட்டர் புறம்போக்கு நிலம் மற்றும் 96,679 சதுர மீட்டர் தனியார் நிலம் கையகப்படுத்துவதில் முட்டுக் கட்டை நீடிக்கிறது.
டெல்டா மாவட்டங்களை திருச்சி நகருடன் இணைக்கும் முக்கிய இணைப்பாக இந்த நெடுஞ்சாலை உள்ளது. ஆனால், இந்த பகுதியில் பிரத்யேக சர்வீஸ் சாலைகள் இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், பெரும்பா லும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் உயிரிழப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
அரசியல் வேறுபாடுகள் இன்றி, பாதிக்கப்பட்ட பகுதி களில் வசிக்கும் அனைத்து மக்களும், பொதுமக்களும் தங்க ளது கையொப்பங்களை இட்டு வருகின்றனர். 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு முன் எங்களது கோரிக்கையை முதல மைச்சருக்கு அனுப்புவோம் என கூட்டமைப்பின் தலைமை அமைப்பாளர் சக்திவேல் தெரிவித்தார்.
ஆக.8 இல் நடந்த ஆலோசனை கூட்டத்தில், நிலம் கைய கப்படுத்தும் பணியை விரைவுபடுத்துவதாக, மாவட்ட நிர்வா கம் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.