நீட் விலக்கு கோரும் கையெழுத்து இயக்கம்
பாபநாசம், நவ.22 - நீட் விலக்கை வலி யுறுத்தி கையெழுத்திட்ட 50 லட்சம் தபால் அட்டை களை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற் கான கையெழுத்து இயக் கம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை யில் நடந்த இயக்கத்தில் பேரூர் செயலர் துளசி அய்யா, மாவட்டப் பிரதிநிதி மனோகரன், சிறுபான்மை அணி நிர்வாகி பக்கீர் மை தீன், இளைஞரணி நிர்வாகி அபுதாகிர் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு கண் பரிசோதனை
பாபநாசம், நவ.22 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆபிதீன் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக் கான கண் பரிசோதனை முகாம் நடந்தது. மகாத்மா கண் மருத்துவமனை மரு. ஹரிஸ்மா தலைமை யிலான மருத்துவக் குழுவி னர் 319 மாணவர்களிடம் கண் பரிசோதனை மேற் கொண்டனர். இதில் பள்ளி நிர்வாகி சித்தார்த்தன், பள்ளி முதல்வர் செல்வி, ரோட்டரி மாவட்ட முன் னாள் ஆளுநர் பாலாஜி, உதவி ஆளுநர் வெங்கடே சன், முன்னாள் உதவி ஆளுநர்கள், தலைவர்கள் பங்கேற்றனர்.
கண் பரிசோதனை முகாம்
தஞ்சாவூர், நவ.22- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், கோக் கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலை வர் ஏ.எஸ்.ஏ. தெட்சிணா மூர்த்தி தலைமை வகித்தார். பேராவூரணி சட்டப்பே ரவை உறுப்பினர் நா. அசோக்குமார் முகாமை துவக்கி வைத்து கண் பரி சோதனை செய்து கொண் டார். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்து வர்கள் கண் நோயாளி களை பரிசோதித்து ஆலோ சனை வழங்கினர். முகா மில் 275 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட் டது. இதில் 86 பேருக்கு கண்புரை இருப்பது கண்ட றியப்பட்டு, மதுரை அர விந்த் கண் மருத்துவ மனைக்கு அறுவை சிகிச் சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாணவர்களுக்கு மூச்சுப் பயிற்சி
அரியலூர், நவ.22 - அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர் நிலைப் பள்ளியில், மாணவர் களின் நினைவாற்றலை அதிகரிப்பதற்காக, புதன் கிழமை மூச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டது. கீழப்பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய யோகா பயிற்சியாளர் ஜெய் சங்கர், “பள்ளி மாண வர்கள் காலை, மாலை தின மும் 10 நிமிடம் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு யோகா மற்றும் மூச்சு பயிற்சியை செய்வ தால் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக் கும். நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். அடிக்கடி சளி மற்றும் சைனஸ் தொல்லை ஏற்படாது. மன அழுத்தம் நீங்கும். படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும். உடல் சோர்வின்றி சுறுசுறுப்பாக காணப்படும்” எனக் கூறி மாணவர்கள் மற்றும் ஆசி ரியர்களுக்கு மூச்சுப் பயிற் சியை செய்து காண்பித்தார். நிகழ்ச்சியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிகில் ராஜ், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
திருச்சியில் 3 இடங்களில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
திருச்சிராப்பள்ளி, நவ.22 - திருச்சி மாநகராட்சிக் குட்பட்ட தில்லைநகர், மண்ணச்சநல்லூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட மண்ணச்சநல்லூர் மற்றும் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இனாம் சமயபுரம் ஊராட்சி ஆகிய மூன்று இடங்களில் ‘மக்களு டன் முதல்வர் சிறப்பு முகாம்’ நடைபெற்றது. முகாம்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் சென்று பொது மக்களிடமிருந்து பெறப் படும் மனுக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை ஆய்வு மேற்கொண்டார். இந்த முகாமில் மாநக ராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி, ஊராட்சிகளில் செயல் படுத்தப்படும் புதிய மின் இணைப்பு, மின்வீதப் பட்டி யல் மாற்றம், பெயர் மாற்றம், மின்பளு மாற்றம், குடிநீர்-கழிவுநீர் இணைப்பு கள், சொத்துவரி பெயர் மாற்றம், பிறப்பு-இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, பட்டா மாறு தல், உட்பிரிவு நில அளவை, இலவச வீட்டு மனைப்பட்டா, வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்பட பல்வேறு அரசு சார்ந்த சேவைகள் குறித்து கோரிக்கை மனுக் கள் பெறப்பட்டன. மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர் கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கைப்பேசி செயலிகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு இன்று பயிற்சி
திருவாரூர், நவ.22 - விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப் போருக்கான கைப்பேசி செயலிகளை (MOBILE APP) எளிதில் கையாள்வதற்கான இலவச பயிற்சி முகாம், திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம், பெரும்பண்ணையூர் ஊராட்சி காப்பணமங்கலத்தில் நவ.23 (வியா ழன்) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கு ஊராட்சித் தலைவர் தமிழரசி தனபால் தலைமை வகிக்கிறார். சர்வம் பைனான்சியல் இன்குலுசிவ் ட்ரஸ்ட் நடத்தும் இந்த இலவச முகாமில், விவசாயத் துறை அலுவலர்கள் கால்நடைத்துறை மருத்து வர்கள் மற்றும் சர்வம் பைனான்சியல் இன்கு லுசிவ் ட்ரஸ்ட் அலுவலர்கள், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா உதவி பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் சுலோச்சனா ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர். பயிற்சியில் பங்கேற்கும் விவசாயி கள் மற்றும் மகளிர் குழுவினருக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
சிபிஎம், வாலிபர் சங்க கொடியை தீயிட்டுக் கொளுத்திய கயவர்கள்
மன்னார்குடி, நவ.22 - திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் பருத்திக் கோட்டை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கக் கொடி யும் சமூக விரோதிகளால் அறுத்து தீயிட்டு கொளுத் தப்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்து கட்சியின் தலைவர்கள் கொடி மரம் உள்ள இடத்திற்கு சென்று பார்த்தனர். பின்பு, மன்னார்குடி தாலுகா காவல் நிலையத்தில் கொடியை அறுத்து எரித்த கயவர்கள் மீது புகார் மனு கொடுக் கப்பட்டது. காவல்துறையினர்கள் உடனடியாக குற்ற வாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டு மென கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக மரபு வார விழா மாணவர்கள், வெளிநாட்டினர் கண்டு களிப்பு
அரியலூர், நவ.22 - ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழ புரத்தில் நடைபெற்ற உலக மரபு வார விழாவை வெளி நாட்டினர் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கண்டு ரசித்தனர். உலக பாரம்பரிய புராதன சின்னம் என யுனெஸ் கோவால் அறிவிக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழ புரம் பிரகதீஸ்வரர் கோவிலில் இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணைந்து உலக மரபு வார விழாவை நடத்தின. இதில் தினசரி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திரைப்பட கண்காட்சி, கலை மற்றும் பண்பாட்டு துறை யின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செவ்வாயன்று நடந்த கலை நிகழ்ச்சிகளை பள்ளி மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினர் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் இந்திய தொல்லியல் துறை கண்காணிப் பாளர் அனில்குமார், உதவி செயற்பொறியாளர் சரவ ணன், முதுநிலை செயலக உதவியாளர் மாரிமுத்து, உதவி கட்டிட பராமரிப்பு உதவியாளர் சீதாராமன், தமிழ்நாடு தொல்லியல் துறை அலுவலர் பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நூலக வளர்ச்சிக்கு நன்கொடை வழங்கல்
தஞ்சாவூர், நவ.22- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை கிளை நூலகத்தில் பொது நூலகத்துறை மற்றும் வாசகர் வட்டம் சார்பில் 56 ஆவது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. வாசகர் வட்டத் தலைவர் பார்த்திபன் தலைமை வகித்தார். ஜி.சுரேஷ் வரவேற்றார். ஓய்வுபெற்ற முதுகலை தமிழா சிரியர் செ.கருப்பையன், நூலக வளர்ச்சிக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கி நூலகத்தின் முதல் கொடையாளராக தன்னை இணைத்துக் கொண்டார். மேலும், பள்ளி மாண வர்கள் 100 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். நூலகப் புரவலர்களாக இள.திகழ்வேந்தன், ஆர்.தமி ழப்பன் இணைந்தனர். நூலகர் கோ.நீலவேணி நன்றி கூறி னார்.
மீனவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சாவூர், நவ.22- மண்டபம் இந்திய கடலோர காவல் படை நிலையம் மற்றும் தமிழ்நாடு கடலோரக் காவல் குழுமம் இணைந்து மீனவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இந்நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள காரங்குடா, மல்லிப்பட்டினம், அதிராம்பட்டி னம் அருகே உள்ள கீழத்தோட்டம் ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது. இதில், இந்திய கடலோர காவல் படை நிலைய அலுவ லர்கள் பி.வி.வினோ, எஸ்.கே.ரமேஷ் ராஜா, ஆறுமுகம், மோகன்ராஜ், தமிழ்நாடு கடலோர காவல் குழும, பட்டுக் கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரான் சிஸ், காவல் ஆய்வாளர் மஞ்சுளா, சேதுபாவாசத்திரம் கட லோரக் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணி யன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், அந்தந்த பகுதியைச் சேர்ந்த மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிகாரிகள் பேசுகையில், “கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது மீனவர்கள் தங்கள் அடையாள அட்டையையும், பாதுகாப்பு உபகரணங்களையும் அவசி யம் எடுத்துச் செல்ல வேண்டும். வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் எச்சரிக்கைகளை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும். எல்லை தாண்டி சென்று கடலுக்குள் மீன் பிடிக்க கூடாது. கடலுக்குள் சட்டவிரோத செயல்கள், கடத்தல், தீவிரவாதிகள் நடமாட்டம், அந்நிய நபர்கள் ஊடு ருவல் இருந்தால் உடனடியாக கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டது.
திருமழப்பாடி கொள்ளிடம் ஆற்றில் கடற்கரை கையுந்து பந்து போட்டி
அரியலூர், நவ.22 - 67 ஆவது குடியரசு தினம் மற்றும் பாரதியார் தினத்தை முன்னிட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் புதிய விளையாட்டான கடற்கரை கையுந்து பந்து போட்டி புதன்கிழமை நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி கொள்ளிடம் ஆற்றில் நடந்த போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வா ளர் தேகளீசன் துவக்கி வைத்தார். திருமானூர் ஒன்றிய குழுத் தலைவர் சுமதி அசோக சக்கரவர்த்தி, கீழப்பழு வூர் சுவாமி மெட்ரிக் பள்ளி தாளாளர் கோவிந்தசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் கரோலின் ஜான்கென்னடி, திரு மழப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீதா இளைய ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனி தனியாக நடத்தப்பட்ட போட்டியில், மாவட்டத்தி லுள்ள அரசு உயர்நிலை, தனியார் மெட்ரிக் பள்ளிகள் என 40 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று விளை யாடினர். இப்போட்டியில், முதலிடம் பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர். இதற்கான ஏற்பாடுகளை அழகப்பா அரசு சிமெண்ட் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அருண்மொழி செய்திருந்தார். அரியலூர் உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.
சமூக நலத்துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
திருச்சிராப்பள்ளி, நவ.22 - திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர கத்தில் சமூக நலத்துறை கூடுதல் இயக்குநர் கார்த்திகா தலைமையில் மண்டல அளவி லான ஆய்வுக் கூட்டம செவ்வாயன்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தில் பயன்பெ றும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப் படும் உணவு வகைகள் தரமானதாகவும், சுவையாகவும் சரியான அளவிலும் வழங்க வேண்டும். சமையல் செய்யும் உணவுப் பொருட்களுக்கான வைப்பறையை தூய் மையாகவும், உணவுப்பொருட்களை பாது காப்பாக வைத்திடவும், தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும். சத்துணவு மையங்களுக்கு வழங்கப்ப டும் முட்டையின் எடை மற்றும் தரத்தினை பரி சோதித்து பெற வேண்டும். அந்தந்த மையத் திலேயே முட்டைகள் சரியாக விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தி, உணவு மாதிரியினை எடுத்து வைக்கும்போது முட்டையை கண்ணாடி குடுவையில் எடுத்து வைக்க வேண்டும். சமைத்த முட்டையை அமைப்பாளர் அல்லது ஆசிரியர் சாப்பிட்ட பிறகே மாணவர்களுக்கு பரிமாறப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேற்காணும் திட்டங்கள் முதலமைச் சரால் நேரடியாக கண்காணிக்கப்படுவதால் சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆய்வுக் கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர், கரூர், திருவாரூர், தஞ்சா வூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்ப லூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (சத்துணவு) மற்றும் உதவி கணக்கு அலுவலர்கள் (சத்துணவு) ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிலக்கடலை விதைகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
அரியலூர், நவ.22 - அரியலூர் மாவட்டத்தில், நிலக்கடலை விதைகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் ம.கோவிந்தராசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், ஆண்டி மடம், ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கடலையில் நல்ல விளைச்சல் பெற தரமான விதைகளை கொண்டு விதைப்பு செய்வது மிகவும் முக்கியம். நல்ல தரமான விதைகள் விவசாயி களுக்கு கிடைத்திட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறை தேவையான நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விவ சாயிகள் தங்களுக்குத் தேவையான விதை களை வாங்கும் போது, அரசினால் விதை விற்பனை செய்ய உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும். விதைகள் வாங்கும் போது, உரிய விற்பனை ரசீதை கேட்டுப் பெற வேண்டி யது மிகவும் அவசியம். விற்பனை ரசீதை அறுவடை முடியும் வரை பத்திரமாக வைத் திருக்க வேண்டும். நிலக்கடலை விதைகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், விற்பனை உரிமம் பெற்று இருக்க வேண்டும். நல்ல முளைப்புத் திறன் உள்ள நிலக்கடலை விதை களையே விற்பனை செய்ய வேண்டும். விதைகளை கூடுதல் விலைக்கு விற்றாலோ, எடை குறைவாக விற்றாலோ, ரசீது இல்லாமல் விற்றாலோ விதைச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே விவசாயிகள் தங்களுக்குத் தேவை யான விதைகளை வேளாண் விரிவாக்க மையங்களில் பெறலாம்” என்றார்.