districts

img

சிறுகதை நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூர், டிச.26 - பேராவூரணியில் தோழர் பா.பாலசுந்தரம் எழுதிய, ‘மட்டைக் கஞ்சி’ என்ற சிறுகதை நூல் வெளியீட்டு விழா  நடைபெற்றது. கலை இலக்கிய பெருமன்ற ஒன்றியத் தலைவர் ஜெ. செல்வகுமார் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலா ளர் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.சித்திரவேல் வரவேற்றார்.  சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மா.கோவிந்தராசு முன்னிலை வகித்தார். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பி னர் நா.அசோக்குமார் நூலை வெளியிட, கவிக்குயில் மருத்து வர் மு.செல்லப்பன் பெற்றுக் கொண்டார். நூலாசிரியர் பா. பாலசுந்தரம் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில், சிபிஐ, சிபிஎம், திக, திமுக, மதிமுக  மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகி கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.