புதுக்கோட்டை, ஏப்.17-
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே வடக்கு அம்மாபட்டினத்தைச் சேர்ந்தவர் முத்துராம லிங்கம் (46). இவர் கடந்த 2022 மார்ச் 27-ஆம் தேதி 7-ஆம் வகுப்பு படித்து வந்த, 12 வயது சிறுமியை பாலி யல் ரீதியான நோக்கத்துடன் கையைப் பிடித்து தனியே இழுத்துச் சென்றதாகவும், இதே குற்றத்தை பலமுறை அவர் செய்துள்ளதாகவும் அறந்தாங்கி காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு கோட்டைப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் முத்துராமலிங்கம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சத்யா, ‘‘போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.60 ஆயிரம் அபராதமும், இந்திய தண்ட னைச் சட்டத்தின் பிரிவு 506(1)இன் கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராத மும், 341ஆவது பிரிவின் கீழ் 1 மாதம் சிறைத் தண்ட னையும் ரூ.500 அபராதமும், 294 (பி) பிரிவின்கீழ் 3 மாதம் சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
குற்றவாளியிடமிருந்து வசூலிக்கப்படும் அபராதத் தொகை மொத்தம் ரூ.75,500-ஐ பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.