திருச்சிராப்பள்ளி, ஆக.25-
குடிநீருடன் கலந்து வரும் சாக்கடை நீரால் திருச்சி மாவட்டம் உறையூர் பகுதி யில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள் ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர். ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட உறை யூர், கல்லறை மேட்டுத் தெரு, சோழராஜ புரம், பாண்டமங்கலம், நாச்சியார்கோவில், பாளையம் பஜார், பஞ்சவர்ணசாமி கோவில் தெரு, வாத்துக் காரத்தெரு உள்ளிட்ட பகுதி களில் வசிக்கும் மக்கள் கடந்த நான்கு நாட்க ளாக கடுமையான காய்ச்சல் மற்றும் வாந்தி யால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்ததில் மஞ்சள் காமாலை இருப்பது உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக குழந்தை கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர், அப்பகுதி தனியார் மற்றும் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் உயி ருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரி கிறது.
அப்பகுதிக்குச் சென்று விசாரித்த போது, பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டுள்ள இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, சாக்கடை நீர் குடிநீர் குழாய்களுடன் கலந்ததால் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டதாக தெரி கிறது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடி யாக குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும். மேலும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இப்பகுதிகளில் கடுமையாக பரவி வரும் மஞ்சள் காமாலை நோயை கட்டுப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.