அரியலூர், ஜன.13 - ஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில் 231 நில ஆர்ஜித வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதி யில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் கையகப் படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாள ரிடம் ஒப்படைக்க, சமீபத் தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதனடிப்படையில், உரி மையாளர்களிடம் நிலப்பட்டா வழங்க ஜெயங் கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் வியாழனன்று மக்கள் நீதி மன்றம் நடத்தப்பட்டது. ஜெயங்கொண்டம் சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவர் நீதிபதி லதா, மக்கள் நீதிமன்றத்தை தலைமையேற்று நடத்தி னார். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ராஜசேகரன் வழக்கை விசாரித்தார். இதில் 231 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, உரிய நில உரிமையாளர் களுக்கு நிலப் பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதிமன்றம் ஆணை பிறப் பித்தது. இதன்மூலம் நில உரிமை யாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங் கப்படும் என்றும், அந்தந்தப் பகுதியின் நில உரிமையா ளர்களிடம் நிலம் ஒப்படைக் கும் பணி மக்கள் நீதிமன்றத் தின் மூலம் தொடர்ந்து நடை பெறும் எனவும் ஜெயங் கொண்டம் துணை ஆட்சி யர் சுமதி, தனி வட்டாட்சியர் (JLPP நிலம் எடுப்பு) ராஜ மூர்த்தி மற்றும் தேவகி கூறினர்.