அரியலூர், 14- ஜெயங்கொண்டம் அருகே இலையூர் ஊராட்சி க்கு கால்நடை மருத்துவ மனை அமைக்க வேண்டும் என்று இலையூரில் நடை பெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ஊராட்சித் தலை வர் தங்கம் அறிவழகன் கோரிக்கை விடுத்தார். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே இலையூர்(மே) கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார், ஜெயங்கொண் டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன் னிலை வகித்தார். இக்கூட்டத் தில் இலையூர் ஊராட்சிக் குட்பட்ட 137 பயனாளிகளு க்கு ரூ.39 லட்சத்து 4 ஆயி ரத்து,660 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கிப் பேசினார். முன்னதாக இலையூர் ஊராட்சி தலை வர் தங்கம் அறிவழகன் பேசு கையில், இலையூர் ஊராட்சி க்கு கால்நடை மருத்துவ மனை இல்லாமல் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நீண்ட நாள் கோரிக்கையான கால்நடை மருத்துவமனை அமைப்ப தற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பி னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் கோரிக் கையை முன்வைக்கிறேன் என்றார். இதற்கு பதிலளித்து பேசிய ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், இலை யூர் ஊராட்சிக்கு கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று ஏற்க னவே அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன். கடந்த சட்டமன்ற கூட்டத்தில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த கூட்டத்தொடரில் இது பற்றி சட்டமன்றத்தில் பேசி கால் நடை மருத்துவமனை அமை ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.