மணத்தட்டை சுடுகாட்டிற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியக் குழு சார்பில், குளித்தலை சட்ட மன்ற உறுப்பினர் இரா.மாணிக்கத்திடம், குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா. முத்துச்செல்வன் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
மேலும் அம்மனுவில், “கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி எல்லைக்குட்பட்ட மணத் தட்டையில் பல்வேறு சமூக மக்கள் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களில் வசித்து வருகின்றனர். மணத்தட்டை காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள சர்க்கார் புறம்போக்கு வார்டு-ஏ, பிளாக்-1, டி.எஸ்.எண்.-5-ல் 10.5 செண்டு நிலத்தில் சுடுகாடு உள்ளது.
குளித்தலை நகராட்சிக்குட்பட்ட 1, 2, 3 ஆவது வார்டுகளில் வசிக்கும் அனைத்து சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள், தலை முறை தலைமுறையாக பல நூறு ஆண்டுக ளாக இந்த சுடுகாட்டில்தான் இறந்தவர்க ளின் உடல்களை எரித்தல், புதைத்தல் சடங்கு களை மேற்கொண்டு வருகின்றனர்.
மழைக்காலங்களில், இறந்தவர்களின் உடல்களை இந்த சுடுகாட்டில் எரிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே மணத்தட்டை காவிரி ஆற்றப்படுகையில் உள்ள இந்த சுடு காட்டிற்கு, மயான கொட்டகையுடன் எரி மேடை அமைத்து கொடுக்க வேண்டும். மேலும் சுடுகாட்டில் சுற்றுச்சுவர், தண்ணீர் வசதியும் செய்து கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.