districts

img

தோவாளையில் பூக்களை பாதுகாக்க குளிர்சாதன கிட்டங்கி அமைத்துத் தருக!

வியாபாரிகள் கோரிக்கை நாகர்கோவில், செப். 19 தோவாளை மலர் சந்தையில் விற்பனை ஆகாத பூக்களை பாதுகாக்க சந்தையின் அருகில் குளிர்சாதன கிட்டங்கி அமைத்து தர வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை யில் உள்ள மலர் சந்தை பண்டிகை நாட்கள்  மற்றும் சுபமுகூர்த்த நாட்களுக்கு முந்தைய தினங்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதி யிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் பல டன் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரிக்கும்என எண்ணிய விவசாயிகள் தற்போது விலை குறைவாக உள்ளதால் கவலையடைந்துள்ளனர். ஒரே ஒரு நாள் மட்டும் ஆயிரத்துக்கும், 1500 ரூபாய்க் கும் பூக்கள் விற்பனையானது. இனி புரட் டாசி மாதம் என்பதால் கோவில் திருவிழாக் கள், திருமணங்கள் போன்ற விழாக்கள் இல்லாததால் பூக்கள் விலை மிகவும் குறைந்துவிட்டது. பூக்கள் விலை குறைவால் விவசாயிகள்  பறிப்பு செலவு கூட கிடைக்காமல்  அவதிப்பட்டு வருகிறார்கள். பூக்கள் அதிக மாக வருகிறது. ஆனால் விலை இல்லை. இத னால் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து பூ வியாபாரி ஒருவர் கூறுகை யில், ஓணத்தை நம்பி விவசாயிகள் அதி களவு பூக்களை உற்பத்தி செய்தார்கள். விற்ப னையும் இல்லை, விலையும் இல்லை. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் விலை கள் குறையும்  இனி ஆயுத பூஜை வந்தால் தான் பூக்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்புள் ளது. விற்பனையாகாத பூக்களை மலை போல குவித்து குப்பை தொட்டிக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. பூக்களை பாது காக்க குளிர்சாதன கிட்டங்கி அமைத்து தந்தால் பூக்களை பாதுகாக்க முடியும். எனவே அரசு மலர் வணிக வளாகத்தின் பக்கத் தில் பூக்களை பாதுகாக்க குளிர்சாதன கிட்டங்கி அமைத்து தர வேண்டும் என்று கூறினார். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒரு  கிலோ பிச்சி ரூ.350-க்கும், மல்லிகைப்பூ  ரூ.500-க்கும், அரளிப்பூ ரூ.150-க்கும், கனகாம் பரம் ரூ.300-க்கும், வாடாமல்லி ரூ.30க்கும்,  சிவப்பு கிரேந்தி ரூ.20-க்கும், சம்பங்கி  ரூ.100-க்கும், முல்லை ரூ.300-க்கும், துளசி ரூ.40-க்கும், கொழுந்து ரூ.90-க்கும்,  மரிக்கொழுந்து ரூ.120-க்கும் மற்ற பூக்களும் விலை குறைந்தே காணப்படுகிறது.