அவிநாசி, ஏப்.1- அவிநாசி அருகே சேவூரில் இரு சிறுமிகளுக்கு, பாலியல் தொல்லை அளித்த நபருக்கு 67 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பு அளித்தது. அவிநாசி அனைத்து மகளிர் காவல் எல்லைக்குட்பட்ட சேவூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் பிரகாஷ் (30). இவர், கடந்த 2020 ஜூன் மாதம் தனது பக்கத்து வீட்டில் விளை யாடிக் கொண்டிருந்த 6 வயது மதிக்கத் தக்க இரு சிறுமிகளை, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதையறிந்த சிறுமி களின் பெற்றோர் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமிகளுக்கு பாலி யல் தொல்லையளித்த சேவூர் அம் பேத்கர் நகரைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் பிரகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதையடுத்து, இவ் வழக்கானது திருப்பூர் மகளிர் நீதி மன்றத்தில் வியாழனன்று விசார ணைக்கு வந்தது. இதில், பிரகாசுக்கு 67 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுகந்தி தீர்ப்பளித்தார். இதையடுத்து, போலீசார் பிரகாசை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.