districts

வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மணப்பாறை வாலிபரை கைது செய்ய சிபிஐ முடிவு

திருச்சிராப்பள்ளி, டிச.4 - திருச்சி மாவட்டம் மணப் பாறை அருகே உள்ள பூமாலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (40). எம்பிஏ பட்டதாரியான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் வேலை பார்த்தார். அதன்பின் ஊர் திரும்பிய இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.  இந்நிலையில், அவர்  மீது சிறுமிகளின் ஆபாச வீடி யோக்களை பதிவிறக்கம் செய்து அதனை வெளிநாடு களுக்கு அனுப்பியதாகவும், அதன் மூலம் லட்சக்கணக் கில் பணம் வாங்கியதாக வும் புகார் எழுந்தது. இதன் பேரில் சர்வதேச காவல் துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய் தது. இதனை தொடர்ந்து  தில்லி சிபிஐ காவல்துறை யின் 6 பேர் கொண்ட குழு வினர், வியாழனன்று மணப் பாறையில் உள்ள ராஜா வின் வீட்டிற்கு சென்று விசா ரணை நடத்தினர்.  மேலும் ராஜாவின் லேப்டாப், கம்ப்யூட்டர், ஹார்டுடிஸ்க், பென்டிரைவ், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதனை  ஆய்வுக்கு உட்படுத்திய சிபிஐ போலீசார், வெள்ளி யன்று மீண்டும் ராஜாவை திருச்சி கண்டோன்மென்ட் பகுதிக்கு அழைத்து வந்து  தனி அறையில் வைத்து  விசாரணை மேற்கொண்டனர்.  இதில், ஜெர்மனியில் உள்ள ஒரு தனியார் நிறு வனம் மூலம் ஆன்-லைனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை ராஜா வெளிநாடுகளுக்கு பகிர்ந்ததாக தகவல் வெளி யாகியுள்ளது. மேலும்  இதற் காக அவர் வெளிநாட்டு பணத்தை வாங்கி தன்னு டைய வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளார். இந் நிலையில் சனிக்கிழமை 3 ஆவது நாளாக சிபிஐ குழு வினர் ராஜாவிடம் விசா ரணை மேற்கொண்டனர்.