திருவாரூர்,நவ.3- திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், திட்டாணிமுட்டம் ஊராட்சி, முசிரியத்தைச் சேர்ந்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.குப்புசாமி (வயது 70) வியாழனன்று இரவு காலமானார். தோழர் ஆர்.குப்புசாமி கட்சியின் கிளைச் செயலாள ராகவும் விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர். தோழரின் மறைவுச்செய்தி அறிந்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன். கொரடாச்சேரி ஒன்றிய செய லாளர் டி.ஜெயபால்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன், மாவட்ட குழு உறுப்பினர் கே.எஸ்.செந்தில் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள்,கட்சியினர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தி னர். இறுதி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.