கரூர், ஜன.11 - கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட செங்காளிபாளை யம் கிராமத்தில் உள்ள தனிநபர் ஒருவ ரின் நிலத்தில் பழங்கால கல்வெட்டு கள் இருப்பதாக வந்த தகவலின் அடிப் படையில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் த. பிரபுசங்கர் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறுகை யில், “கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம், கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சா லையின் மேற்குப் புறத்தில் அமைந் துள்ள சிற்றூர் செங்காளிப்பாளையம். அமராவதி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இவ்வூரில் சிவன் கோவில் ஒன்றும் பெருமாள் கோவில் ஒன்றும் இருந்ததற்கான ஆதாரங்கள் சிதிலமடைந்த நிலையில் காணப்படு கின்றன. சிவன் கோவிலில் செவ்வக வடிவி லான தனிக்கல்லின் ஒருபக்கத்தில் கல் வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தமிழும் கிரந்தமும் கலந்த எழுத்து வடிவில் 13 வரிகளில் கல்வெட்டு காணப்படுகிறது. இதன் முதல் பத்து வரிகளில் தானம் பற்றிய செய்தியும், இறுதியாக உள்ள மூன்று வரிகளில் வடமொழி வாழ்த்து சுலோகமும் காணப்படுகிறது.
இந்தக் கல்வெட்டு கி.பி. ஒன்பதாம் நூற்றாண் டைச் சார்ந்த கல்வெட்டாக இருக்க லாம் என்று அருங்காட்சியகத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இக்கல்வெட்டில் ‘ஸ்ரீதென்னவன் வஞ்சிவேள் இரவிகுவான் என்பவனின் மனைவி நிறந்தேவி என்பவள், தன் கண வரிடமே ஐம்பது பொன் கொடுத்து விலைக்கு நிலம் பெற்று, நிலத்தினை கீழ்குடையூர் சிவன் கோயில் மகாதே வர்க்கு நந்தா விளக்கு எரிப்பதற்காக வும், திருஅமுது படைப்பதற்காகவும், தானமாக வழங்கிய செய்தி’ பொறிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ‘வஞ்சி’ என்பது ‘கருவூரை’ குறிக்கும் என்றும், ‘வேள்’ என்பதற்கு ‘ஒளிபொருந்திய தலைவன்’ அல்லது ‘வேளிர் குலத் தலைவன்’ என்று பொருள் கொள்ளலாம் என்றும், ‘வஞ்சி வேள்’ என்பது “வஞ்சி நகரை ஆண்ட வேளிர் குலத் தலைவன்” என்று பொருள்படும் என்றும் கூறப்படுகிறது. வஞ்சி மாநகரான கரூர் சில காலம் வேளிர் ஆட்சிக்கு உட்பட்டு இருக்க லாம். வஞ்சியை ஆண்ட அந்த வேளிர் வஞ்சிவேள் என்று அழைக்கப்பட்டனர். கரூர் கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்து ‘கரூவூர்’ எனவும் ‘வஞ்சி ‘ எனவும் அழைக்கப்பட்டுள்ளது.
இவை, ‘கருவூர் பொன் வாணிகன் நத்தி அதிட்டானம்’ என்று புகழிமலை (தமிழ்-பிராமி) கல்வெட்டில் இருந்தும், ‘கோ கலியன் மகன் கருவூரிடை தந்நா நிரை கொளல் எரிந்து பட்டான்’ என்ற கரூர் மாவடியான் கோவில் கல்வெட்டில் இருந்தும், ‘ஸ்ரீ வஞ்சிவேள் அடியான்’ என்ற கரூர் நடுகல் கல்வெட்டில் இருந்தும் ‘வஞ்சிப் புறமதில் அலைக்கும் கல்லென் பொருநை’ என்ற புறநானூறு வரிகளில் இருந்தும் பண்டைய காலங்களில் இன்றைய கரூர், கரூவூர் என்றும் வஞ்சி என்றும் வழங்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இப்பகுதியில் உள்ள கல்வெட்டு மற்றும் சிற்பங்களை பாதுகாப்பாக, உடைந்து விடாதபடி எடுத்து கரூர் அருங்காட்சியத்தில் வைப் பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், தொல்லியல் ஆய்வறி ஞர்கள் மூலம் இந்த கல்வெட்டு மற்றும் இப்பகுதியினை ஆய்வுக்கு உட்படுத்த வும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். ஆய்வின் போது, கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், கரூர் அருங்காட்சியக காப்பாட்சியர் மணிமுத்து, மண்மங்கலம் வட்டாட்சி யர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்த னர்.