districts

img

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

தஞ்சாவூர், டிச.7- மிக்ஜம் புயல் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்களுக்கு பல்வேறு மாவட் டங்களிலிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப் பட்டன. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் துறையின் சார்பில் ரூ.26,62,684 மதிப்புள்ள உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை லாரிகளில் ஏற்றி சென்னை மாநகராட்சி புழுதிவாக்கம் நிவாரண மையத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் அனுப்பி வைத்தார் மயிலாடுதுறை   மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  குடிநீர், அரிசி,கோதுமை, பருப்பு, சர்க்கரை, பால் பவுடர்,பிஸ்கட் என  ரூ.12 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் 3 கனரக வானகங்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி  கொடி யசைத்து அனுப்பி வைத்தார். திருவாரூர்  திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நிவாரண பொருட்கள் அடங்கிய கனரக வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து அனுப்பி வைத்தார்.  திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ரூ.1  கோடி மதிப்பிலான நிவா ரணப்பொருட்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 8 லாரிகள் மூலம் சென்னைக்கு வழியனுப்பி வைத்தார்.