உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புகளூர் சங்க அலுவலக கூட்டரங்கில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சசிகலா தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் லட்சுமி சங்கக் கொடியை ஏற்றிவைத்தார். மாவட்டச் செயலாளர் சுமதி, துணை செயலாளர் இந்துமதி, பொருளாளர் ராஜேஸ்வரி, கண்ணகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.