தஞ்சாவூர், ஜன. 6 - தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனத்தில் உடல், மனம் மற்றும் அறிவுக்கு இணக்கமான சமநிலை பெறுதல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில், கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருது பாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மா. விஜயா வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினர்களான சென்னை, இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின், மன அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை அறிவியல் துறை தலைவர் சி.மாதங்கி, தஞ்சை இராமகிருஷ்ண மடத்தலை வர், சுவாமி விமூர்தானந்தா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முன்னதாக தமிழ்த்துறைத் தலைவர் வீ.வெற்றிவேல் வர வேற்றார். ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் ப.ஆனந்தன் நன்றி கூறினார்.