பழனி, ஜூன் 28-
உதவி ஜெயிலர் தேர்வுக்கு தொலை தூரங்களில் உள்ள வெவ்வேறு நகரங்க ளில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ள தால் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் கடந்த 12.4.2023 அன்று சிறைத் துறையில் உதவிஜெயிலர் பணியிடங் களை நிரப்பும் பொருட்டு 59 காலியிடங்க ளுக்கு அறிவிப்பை வெளியிட்டது..இதற் கான தேர்வு வருகிற 1.7.2023 அன்று 15 மையங்களில் நடைபெறுகிறது. ஆனால் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது குறிப்பிட்ட விருப்பதேர்வு மையங் கள் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தில் இடம் வழங்கப்படவில்லை. சென்னை மையம் கேட்டவருக்கு கோவை மையம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல பல மாணவர்களுக்கு விண் ணப்பத்தில் குறிப்பிட சென்டர் வழங்கா மல் தொலைதூரங்களில் தேர்வு மையம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாண வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு வாரியம் மொத்தம் 15 சென்டர்களில் மட்டுமே தேர்வை நடத்துவதால் நிர்வாக காரணங்களுக்காக வழங்கியிருக்கலாம் என்றாலும் தேர்வு வாரியம் வழங்கிய 15 இடங்களில் மாணவர்களுக்கு அருகில் உள்ள மாவட்ட மையங்களில் ஒன்றை வழங்கி இருக்கலாம்..சென்னையில் உள்ள வர் கோவை வந்து தேர்வை எழுதுவது கடினமே. எனவே வருங்காலங்களில் இது போன்ற குளறுபடிகள் இன்றி தேர்வு மையங்களை மாணவர்களுக்கு வழங்க டிஎன்பிஎஸ்சி முன்வர வேண்டும் என ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் வலியுறுத்தியுள்ளது.