அரியலூர், ஆக.7-
அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், தமிழ்க் காடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் ஞாயிறன்று விதைத் திருவிழா நடைபெற்றது.
சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா பங்கேற்று, ‘சுற்றுச் சூழல் காக்க பொறுப்பு ஏற்கிறேன்’ என்ற கையெழுத்து இயக்கத்தில் கை யெழுத்திட்டு விதைத் திருவிழாவை தொடக்கி வைத்தார். முதுநிலை விஞ்ஞானி நேதாஜி மாரியப்பன், பூச்சி யியல் வல்லுநர் ராதாகிருஷ்ணன், தொழில் நுட்பவியலாளர் ராமசுந்த ரம், முன்னோடி மரபு விதை சேகரிப் பாளர் யோகநாதன் உள்ளிட்டோர் பேசினர்.
இவ்விதை திருவிழாவில் பாரம்பரிய விதைகளான நீலப்பு டலை உள்ளிட்ட காய்கறி விதைகள், மூலிகைகள், அரிசி வகைகளான மாப்பிள்ளை சம்பா, நவரா, குதிரை வாலி, ஆத்தூர் கிச்சடி சம்பா, நவ தானியங்களான கருப்பு கவுனி, சிவப்பு கவுனி, நவரா, வரகு, பனி வரகு, சாமை, தினை, நவதானியத் தில் தயாரிக்கப்பட்ட தின்பண்டங் கள், நாட்டு துவரை, நாட்டு பருத்தி விதைகள் (மூன்று ஆண்டு விளைச் சல் தரும் கருங்கண்ணி உள்ளிட் டவை), கீரை வகைகள், தேன், செம்பு பாத்திரங்கள், இயற்கை முறையில் தயாரான வாசனைத் திரவியங்கள், சோப்பு வகைகள், மர செக்கில் தயா ரான எண்ணெய் வகைகள், காய்கறி விதைகள், அபூர்வ வகை மரச்செடி கள், மற்றும் விதைகள், நாட்டு வகை மாடுகள், கோழிகள், பஞ்சகாவ்யா, பூச்சி விரட்டிகள், நெகிழி தவிர்க்க துணிப்பைகள், பசுமை நூல்கள் ஆகியவற்றை விற்பனைக்கு காட்சிப்படுத்தியிருந்தனர்.
இந்த திருவிழாவை காண வந்த விவசாயிகள், பாரம்பரிய விதை கள், இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், செடிகளை ஆர்வத்து டன் வாங்கிச் சென்றனர். மேலும் இந்த திருவிழாவில் இயற்கை இடுபொருட் கள், இயற்கை உணவு முறைகள், வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
துணிப்பை வழங்கல்
நெகிழியை ஒழிக்கும் பொருட்டு சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பாக அனைத்து வியாபாரி களுக்கும், பொதுமக்களுக்கும் இல வச துணிப்பை விநியோகத்தை அப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்ன துரை தொடக்கி வைத்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். இந்த பை சிறு வளூர் அரசு உயர்நிலைப் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அகிலா, துணைத் தலைவர் ரேவதி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட தாகும். நிகழ்ச்சியை ஆசிரியர் ஆவாரை ராசேந்திரன் தொகுத்து வழங்கினார்.
விதைத் திருவிழாவில், மாணவ, மாணவிகளின் சிலம்பம், பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.