புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.முத்து துவக்கி வைத்தார். பேரணியில் மாணவர்கள் சாலைப் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.