districts

சுட்டெரிக்கும் கோடை வெயிலும், தொடர் மின்வெட்டும்

திருச்சிராப்பள்ளி, ஏப்.23- திருச்சியில் கோடை வெயிலின் தாக்கத் தைவிட தொடர் மின் வெட்டு காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். கோடையின் தாக்கம் தொடங்கும் முன்பே அதாவது, கடந்த 15 நாள்களுக்கு முன்பிருந்தே திருச்சி மாவட்டத்தில் மின் வெட்டு சிறிது சிறிதாக தலைதூக்கத் தொ டங்கியது. குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு, சுமார்  அரை அல்லது ஒரு மணி நேரத்தில் நிலைமை  சீரானது. என்றாலும் ஒரு பகுதியில் சீரா னால், மறு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப் படுவது தொடர்ந்தது.  இந்நிலையில் மக்களவைத் தேர்தல் ஏப்.19 அன்று (வெள்ளிக்கிழமை) தமிழ கத்தில் முடிவடைந்தது. மறுநாள் (சனிக் கிழமை) மீண்டும் இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் சுமார்  ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் மின்சாரம்  வந்தது. இந்த மின்வெட்டு, திருச்சி திருவெறும்பூர்  பகுதிகள், பொன்மலை, செம்பட்டு, விமான நிலையம், கேகே நகர், எடமலைப்பட்டி புதூர்,  வயலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதி களவில் காணப்பட்டது. குறிப்பாக ஏப்.21  (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணியள வில் குறிப்பிட்ட இப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் 11 மணியளவில்  மீண்டும் வந்தது. ஆனால் அதில் ஒரு முனை மின்சாரம் மட்டும் வரவில்லை.  மொத்தமுள்ள மும்முனை மின்சாரத்தில்  ஒருமுனை மின்சாரம் ரத்தானதால், ஒவ்வொரு  பகுதியிலும் அவரவர் பகுதி மின் இணைப்புக் கேற்ற வகையில், சில இடங்களில் விளக்கு மற்றும் விசிறிகள் இயங்கவில்லை. சில பகுதி களில் குளிர்சாதனப் பெட்டிகள், ஏசி இயந்தி ரங்கள் இயங்கவில்லை. சில பகுதிகளில் மின்  மோட்டார், மிக்சி கிரைண்டர் உள்ளிட்டவை இயங்கவில்லை. இவ்வாறாக ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு வகையில் பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இது தொடர்பான புகார்களுக்காக பொது மக்கள் 1912, 18004252912 மற்றும் அந்தந்த பகுதி மின்வாரிய அலுவலகங்கள், மின்வாரிய  அலுவலர்கள் தொடர்பு எண்களை தொடர்பு  கொண்டாலும் இணைப்பு கிடைக்கவில்லை. சில இடங்களில் இணைப்பு கிடைத்தாலும் புகார்களை பதிவு செய்தனரே தவிர, மாற்று  நடவடிக்கை விடியும் வரையில் எடுக்கப்பட வில்லை.  இதனால் திருச்சியில் பல்வேறு பகுதி களில் சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற் றுக்கிழமை காலை 6.30 மணி வரை மின்  விநியோகம் சீரடையவில்லை. பின்னர்தான் சீரடைந்தது.

மின் மாற்றிகள் பழுது காரணமா?

இது தவிர கடந்த ஏப்ரல் 12 அன்று திருச்சி  வயலூர் சாலையில் வாசன் சிட்டி பகுதியில்  உள்ள ஒரு மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) பழு தானது. ஏப்.14 அன்று தமிழ் வருடப்பிறப்பு என்பதால், அதை மின் வாரியத்தினர் மறுநாள்  தற்காலிகமாக சீரமைத்தனர். பின்னர் ஏப்.15  அன்று அதே இடத்தில் ஒன்றுக்கு பதிலாக,  இரு மின்மாற்றிகள் புதிதாக அமைக்கப் பட்டன.  இதற்கிடையே ஏப்.21 அன்று (ஞாயிறு) மீண்டும் அந்த இரு மின்மாற்றிகளும் பழு தாகிப் போயின. இதன் காரணமாக அந்தப்  பகுதிக்கு மின் விநியோகம் செய்யும் வகை யில், பிற பகுதிகளிலிருந்து (குறைந்த அள வாவது) மின் விநியோகம் மாற்றி விடப்பட்ட தால் பிற பகுதிகளிலும் மின் தட்டுப்பாடு நில வியதா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற் பட்டுள்ளது. இதே போன்று திருவெறும்பூர், காட்டூர்  பகுதிகளும் மின்வெட்டுக்குத் தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.