districts

திருச்சி முக்கிய செய்திகள்

காரக்கோட்டையில்  மருத்துவ முகாம் 

அறந்தாங்கி, டிச.27 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் காரக் கோட்டை ஊராட்சி பில்லங் குடி ஒல்லனூர் கிரா மத்தில் பகுத்தறிவு கல்வி  அறக்கட்டளை, கும்பகோ ணம் அன்னை கல்வி குழு மம் இணைந்து பொது மக்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தின. முகாமிற்கு காரக் கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சத்ய கலா உதயகுமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் கரு.ராம நாதன் முகாமை துவக்கி  வைத்தார். கும்பகோ ணம் அன்னை கல்வி குழுமத்தின் இயக்குநர் டாக்டர் கே.சுஜி தலை மையில், 20 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பொதுமக்கள் 230 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, மருந்து-மாத்திரைகள் வழங்கினர்.  மணமேல்குடி பகுத் தறிவு கல்வி அறக் கட்டளை நிர்வாக இயக் குநர்கள் சே.குமார், சுவாதிகுமார் உள்ளிட் டோர் முகாமில் கலந்து கொண்டனர்.

அறிவியல் இயக்க நன்னிலம் ஒன்றிய மாநாடு

திருவாரூர், டிச.27 - தமிழ்நாடு அறி வியல் இயக்கம் திருவா ரூர் மாவட்ட நன்னிலம்  ஒன்றிய மாநாடு பூந்தோட் டம் ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் ஏ.ஆல்பர்ட் ஜஸ்டின் தலைமை ஏற்று உரை யாற்றினார். குடவாசல் ஒன்றியச் செயலாளர் கோ.பிளாட்டோ வர வேற்றார். ஸ்ரீ லலிதாம் பிகா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் முதல் வர் முத்துராஜா, மாவட்ட  துணைத் தலைவர் வி. விஜயன், முன்னாள் மாவட்ட இணைச் செய லாளர் கோ.காந்திராஜன் ஆகியோர் உரையாற்றி னர். அறிவியல் இயக்கத் தின் மாவட்டச் செய லாளர் பி.சங்கரலிங்கம்  புதிய பொறுப்பாளர் களை அறிவித்து நிறை வுரையாற்றினார். மாநாட்டில் தலைவ ராக ஆறுமுகம், செய லாளராக சி.நன்மாறன், பொருளாளராக டி.அஜித்  ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

தெரு நாய்களை  பிடிக்க அறிவுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, டிச.27 - திருச்சி மண்டலம்-5-ன் வார்டு குழு கூட்டம்  மண்டல குழு தலைவர்  விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடைபெற் றது.  இக்கூட்டத்தில் மண்டலம் 5-க்கு உட்பட்ட வார்டுகளில் பாதாள சாக் கடை அமைக்கும் பணி,  குடிநீர் குழாய் அமைக் கும் பணி, தார்ச் சாலை  அமைக்கும் பணி, சிமெண்ட் ரோடு புதுப்பிக் கும் பணி ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும். ஒவ்வொரு வார்டுகளிலும் சுற்றித் திரிகின்ற நாய்களால் பொதுமக்கள் பெரும்  சிரமத்துக்கு உள்ளா கின்றனர். எனவே தெருக்களில் சுற்றி திரி கிற நாய்களை விரை வாக பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை கவுன்சிலர்கள் முன் வைத்தனர். இக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

பட்டுக்கோட்டை அஞ்சல் நிலைய வங்கிப் பிரிவில் பணம் எண்ணும் இயந்திரம் வைக்கப்படுமா?

தஞ்சாவூர், டிச.27-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை நகரில் உள்ள தலைமை  அஞ்சலக அலுவலக வங்கிப் பிரி வில் பணம் எண்ணும் இயந்திரத்தை வைக்க வேண்டும் எனக் கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.  பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில், வங்கிப்  பிரிவில் பணம் எண்ணும் இயந்தி ரத்தை வைக்க வேண்டுமென சமூக  ஆர்வலர் வ.விவேகானந்தம் பட்டுக் கோட்டை கோட்ட அஞ்சலக கண்கா ணிப்பாளர் மற்றும் தலைமை அஞ்ச லக அதிகாரி ஆகியோருக்கு கோ ரிக்கை மனு அனுப்பி உள்ளார்.  அம்மனுவில், “பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் வங்கிப் பிரிவில் சிறுசேமிப்பு, நிரந்தர வைப்புக்  கணக்கு, தொடர் வைப்புக் கணக்கு,  மூத்த குடிமக்கள் சேமிப்புக் கணக்கு  ஆகியவை துவங்கி செயல்பாட்டில் உள்ளது. மாதத்தின் முதல் இரண்டு  வாரத்தில் இந்த பிரிவில் வாடிக்கை யாளர்களின் கூட்டம் அதிகமாக இருக் கிறது. இங்கு பணம் எண்ணுவதற்கு இயந்திரம் இல்லாததால், அஞ்சல் துறை அலுவலர்கள் பணம் வாங்கு வதற்கும், கொடுப்பதற்கும் காலதாம தம் ஆகிறது. எனவே, பட்டுக் கோட்டை தலைமை அஞ்சலக  வங்கிப் பிரிவில் பணம் எண்ணும்  இயந்திரம் வைக்க வேண்டும். இத னால் வாடிக்கையாளர்களுக்கும், பணிபுரியும் அலுவலர்களுக்கும் வசதியாக இருக்கும். மேலும், மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மேற்கண்ட பிரி விற்கு முகவர்கள் அதிகளவில் வரு கின்றனர். இவர்கள் நீண்ட நேரம்  வரிசையில் காத்திருக்க வேண்டி யுள்ளது. எனவே, மாதத்தின் முதல்  இரண்டு வாரங்களில் வங்கி பிரி விற்கு இரண்டு அலுவலர்களை நியம னம் செய்ய வேண்டும்” என குறிப்பிடப் பட்டுள்ளது.

காணும் பொங்கல் அன்று திருக்கடையூரில் மாடு, குதிரை  எல்கை பந்தயம் நடத்த ஆலோசனை

மயிலாடுதுறை, டிச.27 - காணும் பொங்கலையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் திருக் கடையூரில் மாடு, குதிரை எல்கை   பந்தயம் நடத்துவது குறித்த ஆலோ சனை கூட்டம் செவ்வாயன்று நடை பெற்றது. திருக்கடையூரில் சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதி ரைகள் அனுமதிக்கப்பட்டு  மாடு கள், குதிரைகள் ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடை பெறுவது வழக்கம். இந்நிலையில் காணும் பொங்க லன்று எல்கை பந்தயம் நடத்துவதற் கான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு துணைத் தலைவர் பாஸ்க ரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சிம்சன், டி.மணல்மேடு ஊராட்சி  மன்ற தலைவர் துரைராஜன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஜெய மாலதி சிவராஜ் வரவேற்றார். 2024 காணும் பொங்கலன்று எல்கை பந்தயத்தை திருக்கடை யூர், டி.மணல்மேடு, பிள்ளை பெரு மாள்நல்லூர், மாணிக்கப்பங்கு, காழியப்பநல்லூர், கிள்ளியூர், தில்லையாடி ஆகிய 7 ஊராட்சி கள் மற்றும் தரங்கம்பாடி பேரூ ராட்சி தலைவர்கள் இணைந்து நடத்துவது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமுர்த விஜய குமார் தலைமையில் விழா குழுவி னர்களை நியமனம் செய்வது. விழாவிற்கு தமிழக அமைச் சர்கள், நாடாளுமன்ற உறுப்பி னர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகி களை அழைப்பது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உயிர் காக்கும் மருந்துகளை  இருப்பு வைக்க வலியுறுத்தல்

திருவாரூர், டிச.27 -  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றிய பேரவை கூட்டம் பேர ளத்தில் நடைபெற்றது. பேரவைக்கு ஒன்றியத் தலைவர் எஸ்.சுரேந்தர் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் எஸ். எம்.சலாவுதீன் துவக்க உரையாற்றினார். மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ஜெய்கிஷ், மாவட்டப் பொருளாளர் எம்.டி.கேசவராஜ், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் பி.தனம் ஆகியோர் வாழ்த்தி பேசினார். மாவட்டச் செய லாளர் ஏ.கே.வேலவன் நிறைவுரையாற்றினார்.  கூட்டத்தில் தலைவராக ஜெ.கக்கன், செயலாளராக  கே.எம்.பாலா, பொருளாளராக ஜெ.ரஞ்சித் ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர். அரசு மருத்துவமனையில் 24  மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை உறுதிப்படுத்த  வேண்டும். கூடுதலாக மருத்துவர் மற்றும் செவிலியர் களை நியமிக்க வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மின் கட்டண உயர்வை திரும்பப்  பெறக் கோரி மனிதச் சங்கிலி

கும்பகோணம், டிச.27- மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெறக்  கோரி திருபுவனத்தில் சிறு, குறு தொழில் சங்கத்தினர் புத னன்று மனிதச் சங்கிலி இயக்கம் நடத்தினர். ஒன்றிய அரசின் சிறு, குறு தொழில் கூடங்களுக்கு சுமத்தப்பட்ட கடுமையான மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி, தொழில் முனை வர்கள், தொழிலாளர்கள், அனைத்துக் கட்சியின் தொழிற் சங்கங்கள் இணைந்து, மின் கட்டண உயர்வை முழு மையாக திரும்பப் பெற வலியுறுத்தி புதன்கிழமை மனிதச் சங்கிலி இயக்கம் நடத்தின. அதனொரு பகுதியாக கும்பகோணம் அருகே உள்ள  திருபுவனம் சிட்கோ தொழிற்பேட்டையில், தஞ்சாவூர் மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் சார்பில்  மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. இயக்கத்திற்கு சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  தஞ்சை மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்க கே.கே. முத்து, சிஐடியு தொழிற்சங்க பிரதிநிதிகள், சிறு-று தொழி லாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு  போட்டிகள்: ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர், டிச.27 -  தமிழ்நாட்டிலுள்ள 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி  மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலை யும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில், ஆண்டு தோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மாவட்டம் வாரி யாக கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப் படுகின்றன. நிகழாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 11, 12 ஆம்  வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 9.1.2024 (செவ்வாய்) அன்றும், கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 10.1.2024 (புதன்) அன்றும், தஞ்சா வூர் மாவட்டம் அரசர் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30  மணி முதல் நடைபெறவுள்ளன.  இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை நிறைவு செய்து தலைமையாசிரியர், முதல்வர், துறைத் தலைவ ரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் அளிக்க வேண்டும்.   ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் மொத்தம் 3 மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிகளுக்குரிய தலைப் புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர் களுக்கு அறிவிக்கப்படும். ஒவ்வொரு போட்டிக்கும் முதல்பரிசு ரூ.10 ஆயிரம்,  2 ஆம் பரிசு ரூ.7 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதம்  மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.1 லட்சத்து 32 ஆயிரம்  காசோலையாக வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட  ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

சிறுநீரகம் வாங்கித் தருவதாக ரூ.3.65 லட்சம் மோசடி 2 பேர் மீது வழக்கு

வெம்பக்கோட்டை, டிச.27 - விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே  உள்ள கீழத்தாயில்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்முரு கன்(42). இவரது மகனுக்கு சிறுநீரக பிரச்சனை இருந்துள்  ளது. இதனை அறிந்த கணஞ்சாம்பட்டியைச் சேர்ந்த  தவிட்டுராஜ் மற்றம் மாணிக்கம் ஆகியோர், செந்தில்முரு கனிடம் தங்களுக்கு தெரிந்த மருத்துவர் இருப்பதாக வும், அவரிடம் பணம் கொடுத்தால் சிறுநீரகம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.  மேலும், அவரிடம் வங்கி கணக்கு மற்றும் இணைய பரி மாற்றம் மூலம் என ரூ.3.65 இலட்சம் பெற்றார்களாம். ஆனால், சிறுநீரகமும் பெற்றுத் தரவில்லை. பணத்தை யும் தரவில்லையாம். எனவே, இதுகுறித்து செந்தில்முரு கன் வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்பேரில் தவிட்டுராஜ், மாணிக்கம் ஆகியோர்  மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். 

பன்மடங்கு உயர்ந்த பூக்கள் விலை!

நாகர்கோவில், டிச.27 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தோவாளை பூ சந்தையில் விதவிதமான பூக்கள் வந்து குவிந்தன. பனிப்பொழிவு காரணமாக பூ உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ள நிலையிலும் பூக்களின் தேவை அதிகரித்திருப்ப தால் விற்பனை களைகட்டியது. கிறிஸ்துமஸ் பண்டி கையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ, 3,500 ரூபாயாகவும்,  400 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்ட பிச்சிப்பூ 2,500 ரூபாயாகவும் 300 ரூபாய்க்கு விற்பனை  செய்யப்பட்ட கனகாம்பரம் 2,000 ரூபாயாகவும் விலை உயர்ந்து விற்கப்பட்டது. குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த தொடர்  கன மழையினால் பூந்தோட்டங்கள் அழிவை சந்தித்துள் ளன. இதனால் குமரி மாவட்டம் தோவாளை மலர்  சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது.  புத்தாண்டு, பொங்கல் ஆகிய பண்டிகைகள் வர உள்ளதால் பூக்க ளின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பூக்கள்  விலை பல மடங்கு உயர வாய்ப்புள்ளது என வியாபாரி கள் தெரிவித்தனர்.