அரியலூர், டிச.27 - அரியலூர் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. 8 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற இந்த கண்காட்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் த.விஜயலட்சுமி தொடக்கி வைத்தார். பின்பு, மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு, அதன் விளக்கங்களை கேட்டறிந்தார். கண்காட்சிக்கு மாவட்ட கல்வி அலுவ லர் எஸ்.ஜெயா முன்னிலை வகித்தார். பள்ளித் துணை ஆய்வாளர் பழனிசாமி, சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செ.அலெக்ஸாண்டர் கென்னடி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் குண பாலினி, கண்காட்சி இணை ஒருங்கிணைப் பாளர் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கண்காட்சியில், 45 மாணவ-மாண விகள் பங்கேற்று வேதியியல், உயிரியல், இயற்பியல், இயற்கை வளங்கள் மற்றும் தொழில் நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை கள் சார்ந்த படைப்புகளை காட்சிப் படுத்தினர். இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.